சென்னை: சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் நடிகர் தனுஷ் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இகுறித்து விவாதிக்க அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் என அனைவரும் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நடிகர்களின் சம்பளம் குறைப்பு , திரைப்படங்களின் தயாரிப்பு செலவை குறைப்பது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் இனிவரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், உள்ளடக்கிய கூட்டுக் குழுவும் அமைக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் நிலையில் இனி வரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து தனுஷ் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. அப்போது சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இருக்கும் பல தீர்மானங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை எடுக்கப்பட உள்ளதாம்.
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}