சென்னை: வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்காக முழு வீச்சில் இறங்கி உள்ளேன். அதற்கான வேலையும் தொடங்கி விட்டது. அவருடன் நடிக்காமல் விட மாட்டேன் என்று நடிகை தேவயானி ஷர்மா கூறி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. நடிகர் சிம்பு குறித்து பல்வேறு விமர்சனங்களும், கிசுகிசுக்களும் வந்தாலும் அவருக்கொன்று தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பதை மறுக்க முடியாது. இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம்.

இப்போது, ஒரு நடிகை இவருடன் நடிப்பதை தன் லட்சிம் என்றே கூறியுள்ளார். யார்ரா அது என்று கூட்டத்தை விலக்கிப் பார்த்தால்.. அட நம்ம தேவயானி ஷர்மா!
டெல்லியை பூர்விகமாக கொண்டவர் நடிகை தேவயானி ஷர்மா. ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களில்
வலம் வந்து கொண்டு இருப்பவர். 2021 ஆம் ஆண்டு, ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இவர்தான் சிம்புவுடன் சேர துடித்துக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஹிந்தி , தெலுங்கு என்ற மொழிகளில் நான் படங்கள் பண்ணுனாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும்.
கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதை ஆகும். இதற்கான ஒரு முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையும் தொடங்கி விட்டது. அதுமட்டுமின்றி மக்கள் நான் பார்க்கும் வேலையை அங்கீகரித்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வாழ்வின் லட்சியமாகும் என்று கூறியுள்ளார்.

பயங்கரமான சபதமா இருக்கேம்மா.. பார்க்கலாம்.. யாரு ஜெயிக்கிறாங்கன்னு.. யாரு ஜெயிச்சாலும் லாபம்தான்.. ரசிகர்களுக்கு!
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}