நடிகை கெளதமி சொத்துக்களை அபகரித்த வழக்கு.. அழகப்பன் குடும்பம் கேரளாவில் சிக்கியது!

Dec 21, 2023,07:14 PM IST


சென்னை: நடிகை கெளதமியின் சொத்துக்களை பவர் ஆப் அட்டர்னி பத்திரத்தை பயன்படுத்தி மோசடியாக அபகரித்த வழக்கில் தேடப்பட்டு வந்த அழகப்பன் உள்ளிட்ட ஆறு பேரையும் தமிழ்நாடு தனிப்படை போலீஸார், கேரள மாநிலம் திருச்சூரில் வைத்து கைது செய்துள்ளனர்.


நடிகை கெளதமிக்குச் சொந்தமான சொத்துக்களை பவர் ஆப் அட்டர்னி பத்திரங்களைப் பயன்படுத்தி மோசடியாக அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அபகரித்து விட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போது பாஜகவில் இருந்து வந்த நடிகை கெளதமி, அழகப்பன் குறித்து கட்சித் தலைவர்களிடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது.


ஆனால் கட்சியில் அழகப்பன் செல்வாக்கு அதிகம் இருந்ததால் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கெளதமி. இதையடுத்து அழகப்பன் உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.




கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீடு, சென்னை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தைத்  தொடர்ந்து அழகப்பன் உள்ளிட்ட ஆறு பேரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை தீவிரமாக போலீஸார் தேடி வந்த நிலையில் திருச்சூரில் அவர்கள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.


இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு அழகப்பன் உள்ளிட்ட ஆறு பேரும் கூண்டோடு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் திருச்சூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் தமிழ்நாட்டுக்கு அவர்கள் கொண்டு வரப்படவுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்