மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு.. கையோடு இட்லி, கெட்டி சட்னியை ஒரு கை பார்த்த ஹன்சிகா!

Oct 06, 2024,04:30 PM IST

மதுரை: என்ன  சொல்லுங்க.. நம்ம தமிழ்நாடு போல வருமா.. அதிலும் மதுரை போல வரவே வராதுங்க.. அட இதை நாம சொல்லலிங்க.. ஹன்சிகா மோத்வானிதான் சொல்லாமல் சொல்லியுள்ளார்.


மும்பைப் பெண்ணான ஹன்சிகா, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெரிய ரவுண்டு வந்தவர். முன்னணி இளம் நாயகர்கள் அனைவரோடும் இணைந்து கலக்கியவர். தமிழ்நாட்டு மருமகளாகப் போகிறார் என்றெல்லாம் கூட கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.




இந்த நிலையில்  சமீப காலமாக தமிழ்ப் படங்களில் ஹன்சிகாவைக் காணவில்லை. கிட்டத்தட்ட ரசிகர்கள் அவரை மறந்து விட்டனர். ஆனால் ஹன்சிகா தமிழ்நாட்டை மறக்கவில்லை. தனது குடும்பத்தோடு மதுரைக்கு வந்தவர் அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பச்சைப் பட்டு எடுத்து வந்து அம்மனுக்கு சார்த்தினார்.


கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் முடித்த கையோடு ஒரு ஹோட்டலுக்கும் சென்று குடும்பத்தோடு மதுரை ஸ்டைல் சாப்பாட்டை சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், மும்பையில பொறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான். நம்ம ஊரு சாப்பாடு என்று கூறி மகிழ்ந்துள்ளார்..


அதில் இட்லி, தோசை, தேங்காய் சட்னியை ஒரு பிடி பிடிக்கிறார். கடைசியாக பில்டர் காபியையும் ரசித்து சுவைக்கிறார்.. சூப்பரா இருக்கு என்று புன்னகைத்தபடி கூறும் வீடியோவைப் போட்டு மகிழ்ந்துள்ளார் ஹன்சிகா.. மீனாட்சியைப் பார்த்தாச்சுல்ல.. இனி எல்லாமே ஹேப்பிதான் ஹன்சிகா!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்