Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின்.. மனிதாபிமான கண்ணோட்டத்துடன் போலீஸ் ஆட்சேபிக்கவில்லை!

Nov 20, 2024,06:33 PM IST

சென்னை: நடிகை கஸ்தூரிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அவருக்கு சிறப்புக் குழந்தை இருப்பதால் குழ்நதையின் நலன் கருதி காவல்துறை ஜாமின் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதனால் எழும்பூர் நீதிமன்றம், கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் அளித்துள்ளது.


சென்னையில் நடந்த பிராமண சமுதாயத்தினர் பங்கேற்ற போராட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட கஸ்தூரி பேசுகையில், 300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது.எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள் என்று பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 




இந்நிலையில், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தெலுங்கு பேசும் அமைப்புகள் பல புகார்கள் கொடுத்தன. இதன் பேரில் சென்னை, மதுரையில் கஸ்தூரி மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனு செய்தார்.  ஆனால் அவருக்கு முன்ஜாமின் கிடைக்கவில்லை.


இந்நிலையில், தலைமறைவாக இருந்த கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தேடப்பட்டு வந்தார். இந்தத் தேடலில் ஹைதராபாத்தில் தங்கியிருந்த கஸ்தூரியை போலீஸார் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  நவம்பர் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நடிகை கஸ்தூரி தரப்பில், தனக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமு் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமின் அளித்து நீதிபதி தயாளன் உத்தரவிட்டார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்