தலைமறைவாக இருக்கும் நடிகை கஸ்தூரி.. முன்ஜாமின் கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு

Nov 11, 2024,05:49 PM IST

மதுரை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில் அந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி.


கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த போராட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசினார் நடிகை கஸ்தூரி. ராஜாக்களுக்கு சேவகம் செய்வதற்காக தெலுங்கு பேசும் பெண்கள் கொண்டு வரப்பட்டார்கள் என்று அவர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.




பல்வேறு தெலுங்கு பேசுவோர் சங்கங்கள் அவர் மீது மதுரை, திருச்சி, சென்னை என்று பல்வேறு ஊர்களில் புகார்கள் கொடுத்தன. இ்நத நிலையில் மதுரையில் கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு அடிப்படையில் நடிகை கஸ்தூரியை விசாரிக்க  அவரது வீட்டிற்கு  போலீசார் சென்றனர். அப்போது கஸ்தூரி வீடு பூட்டி இருந்தது. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்து செய்யப்பட்டுள்ளதால், கஸ்தூரி வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி இருப்பதாக அவரை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தேடி வருகின்றனர்.


தலைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கோரி மனு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி. அவரது முன்ஜாமின் மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்