மதுரை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில் அந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த போராட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசினார் நடிகை கஸ்தூரி. ராஜாக்களுக்கு சேவகம் செய்வதற்காக தெலுங்கு பேசும் பெண்கள் கொண்டு வரப்பட்டார்கள் என்று அவர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.
பல்வேறு தெலுங்கு பேசுவோர் சங்கங்கள் அவர் மீது மதுரை, திருச்சி, சென்னை என்று பல்வேறு ஊர்களில் புகார்கள் கொடுத்தன. இ்நத நிலையில் மதுரையில் கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு அடிப்படையில் நடிகை கஸ்தூரியை விசாரிக்க அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது கஸ்தூரி வீடு பூட்டி இருந்தது. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்து செய்யப்பட்டுள்ளதால், கஸ்தூரி வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி இருப்பதாக அவரை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தேடி வருகின்றனர்.
தலைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கோரி மனு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி. அவரது முன்ஜாமின் மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}