மதுரை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில் அந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த போராட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசினார் நடிகை கஸ்தூரி. ராஜாக்களுக்கு சேவகம் செய்வதற்காக தெலுங்கு பேசும் பெண்கள் கொண்டு வரப்பட்டார்கள் என்று அவர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.

பல்வேறு தெலுங்கு பேசுவோர் சங்கங்கள் அவர் மீது மதுரை, திருச்சி, சென்னை என்று பல்வேறு ஊர்களில் புகார்கள் கொடுத்தன. இ்நத நிலையில் மதுரையில் கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு அடிப்படையில் நடிகை கஸ்தூரியை விசாரிக்க அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது கஸ்தூரி வீடு பூட்டி இருந்தது. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்து செய்யப்பட்டுள்ளதால், கஸ்தூரி வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி இருப்பதாக அவரை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தேடி வருகின்றனர்.
தலைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கோரி மனு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி. அவரது முன்ஜாமின் மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}