மதுரை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில் அந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த போராட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசினார் நடிகை கஸ்தூரி. ராஜாக்களுக்கு சேவகம் செய்வதற்காக தெலுங்கு பேசும் பெண்கள் கொண்டு வரப்பட்டார்கள் என்று அவர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.

பல்வேறு தெலுங்கு பேசுவோர் சங்கங்கள் அவர் மீது மதுரை, திருச்சி, சென்னை என்று பல்வேறு ஊர்களில் புகார்கள் கொடுத்தன. இ்நத நிலையில் மதுரையில் கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு அடிப்படையில் நடிகை கஸ்தூரியை விசாரிக்க அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது கஸ்தூரி வீடு பூட்டி இருந்தது. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்து செய்யப்பட்டுள்ளதால், கஸ்தூரி வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி இருப்பதாக அவரை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தேடி வருகின்றனர்.
தலைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கோரி மனு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி. அவரது முன்ஜாமின் மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}