தாமரை மலரும்.. தமிழ்நாடும் வளரும்.. எழுதி வைத்து முழங்கிய நடிகை நமிதா.. வட சென்னையில்!

Apr 03, 2024,04:36 PM IST

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரித்தார். அப்போது தாமரை மலரும் தமிழ்நாடும் வளரும் என்று முழங்கினார் அவர்.


நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் பாஜக சார்பில் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். இந்த  தொகுதியில் திமுக 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக ஒரு முறையும்  வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த தொகுதியில் இந்த மக்களவை தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. 


இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, திமுக சார்பில் சிட்டிங் எம்பி கலாநிதி வீராசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அமுதினி  போட்டியிடுகின்றனர்.




இந்நிலையில், பாஜக கட்சி சார்பில் போட்டியிடும் பால்கனராஜை ஆதரித்து நடிகை நமிதா பிரச்சாரம் செய்து வருகிறார். ஒரு பெரிய பேப்பரில் தனது பிரச்சாரப் பேச்சை எழுதி வைத்திருந்தார் நமிதா. அதைப் பார்த்தபடி அவர் பேசினார். தமிழிலேயே பேசினார். கொஞ்சும் தமிழில் நமிதா பேசியதாவது: 


பாஜக, மீனவர்களுக்காக ரூ.39000 கோடியை  கொடுத்துள்ளது. எல்லாருக்கும் நிறைய வீடு கட்டி கொடுத்திருக்காங்க, பாத்ரூம் கட்டி கொடுத்திருக்காங்க. நம்முடைய வேட்பாளர் பால்கனகராஜ் நன்றாக படித்தவர். உங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்தவர். சட்டம் படித்தவர், நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்தவர். உங்க கஷ்டத்தை நன்றாக புரிந்தவர். உங்களுக்காக ஒருவர் உங்களில் ஒருவர்.


பார் கவுன்சில் சங்கத்தில் 4 முறை தலைவராக இருந்தவர். நீங்கள் தைரியமாக நம்பி பால்கனராஜுக்கு தாமரை சின்னத்தில்  ஓட்டு போடுங்க. 24 மணி நேரம் பாதுகாப்பாக இருப்பாரு. தாமரை மலரும் தமிழ்நாடும் வளரும். நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு யாரு யாரு எல்லாம் வேலை பார்க்கிறார்களோ அங்க எல்லாம் நல்லா இருப்பாங்க என்று கூறி வாக்கு சேகரித்தார் நமிதா.


நமிதா பிரச்சாரத்திற்கு வந்ததால் அவரை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் கூடியிருந்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்