சென்னை: சென்னை மதுரவாயில் பகுதியில் வசித்து வரும் சோனா வீட்டில் கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்ற சிவா மற்றும் லோகேஷ் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்ற நடிகை சோனா ஹைடன் கோலிவுட்டில் குத்தாட்ட பாடல்கள் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது சென்னை மதுரவாயலில் உள்ள கிருஷ்ணா தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்று இரவு மர்ம நபர்கள் இரண்டு பேர் காம்பௌண்ட் சுவர் ஏறி குதித்து அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏசி யூனிட்டை திருட முயன்றுள்ளனர். அப்போது மர்ம நபர்களை நாய் பார்த்ததும் குறைக்க ஆரம்பிக்கவே, வெளியில் வந்த சோனா அவர்களை தடுக்க நினைத்து கூச்சலிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் இருவரும் சோனாவை கத்தியை காட்டி மிரட்டி தப்பியோடினர்.
இதனையடுத்து நடிகை சோனா மதுரவாயில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றப்பிரிவு போலீசார் சோனாவின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதே வேளையில் தப்பித்து ஓடிய மர்ம நபர்களை பிடிக்கவும் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நடிகை சோனா வீட்டில், கத்தியை காட்டி திருட முயன்ற சிவா மற்றும் லோகேஷ் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவா என்பவர் மதுரவாயில் பகுதியை சேர்ந்தவர் என்பதும், லோகேஷ் அவரது கூட்டாளி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}