சென்னை: சென்னை மதுரவாயில் பகுதியில் வசித்து வரும் சோனா வீட்டில் கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்ற சிவா மற்றும் லோகேஷ் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்ற நடிகை சோனா ஹைடன் கோலிவுட்டில் குத்தாட்ட பாடல்கள் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது சென்னை மதுரவாயலில் உள்ள கிருஷ்ணா தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்று இரவு மர்ம நபர்கள் இரண்டு பேர் காம்பௌண்ட் சுவர் ஏறி குதித்து அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏசி யூனிட்டை திருட முயன்றுள்ளனர். அப்போது மர்ம நபர்களை நாய் பார்த்ததும் குறைக்க ஆரம்பிக்கவே, வெளியில் வந்த சோனா அவர்களை தடுக்க நினைத்து கூச்சலிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் இருவரும் சோனாவை கத்தியை காட்டி மிரட்டி தப்பியோடினர்.

இதனையடுத்து நடிகை சோனா மதுரவாயில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றப்பிரிவு போலீசார் சோனாவின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதே வேளையில் தப்பித்து ஓடிய மர்ம நபர்களை பிடிக்கவும் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நடிகை சோனா வீட்டில், கத்தியை காட்டி திருட முயன்ற சிவா மற்றும் லோகேஷ் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவா என்பவர் மதுரவாயில் பகுதியை சேர்ந்தவர் என்பதும், லோகேஷ் அவரது கூட்டாளி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}