மும்பை: அதானி குழுமம் நாடு முழுவதும் உள்ள 7 முக்கிய விமான நிலையங்களை ரூ. 60,000 கோடி செலவில் அதி நவீனமாக மாற்றும் பணியில் ஈடுபடவுள்ளது.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்த பணிகளை செயல்படுத்தி முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதானி போர்ட்ஸ் மூலம் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களின் தற்போதைய பயன்பாட்டுக் கொள்ளளவு 2024ம் ஆண்டுக்குள் 3 மடங்கு அதிகரிக்கும் என்றும் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான கரண் அதானி கூறியுள்ளார்.
இந்த 60,000 கோடி ரூபாய் நிதியில், ரூ. 30,000 கோடியை ஏர் சைட் மேம்பாட்டுக்கும், ரூ. 30,000 கோடியை சிட்டி சைட் மேம்பாட்டுக்கும் செலவிடப் போகிறார்களாம். மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, குவஹாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் விமான நிலையங்கள் இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளனவாம்.
ஏர்சைட் என்பது விமான நிலையத்தின் வருகைப் பகுதி, புறப்பாட்டுப் பகுதி, ரன்வே, கட்டுப்பாட்டு கோபுரங்கள், விமானங்களை நிறுத்தும் ஹங்கர் ஆகியவையாகும். சிட்டி சைட் என்பது விமான நிலையத்திந் கமலர்ஷியல் பகுதியைக் குறிக்கும்.
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}