மனுசன் மட்டும் தான் செல்பி எடுப்பானா.. ஆதித்யா எல்1 என்ன பண்ணிருக்கு பாருங்க!

Sep 07, 2023,06:45 PM IST
பெங்களூரு: இந்தியாவின் ஆதித்யா எல் 1 விண்கலம் தான் செல்லும் பாதையிலிருந்தபடி பூமியை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. கூடவே தன்னைத் தானே ஒரு செல்பி எடுத்தும் அசத்தியுள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை இந்தியா பி.எஸ்.எல்.வி - சி 57 ராக்கெட் உதவியுடன்  கடந்த செப்டம்பர் 2ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது தற்போது லேக்ராஞ்ச் 1 பகுதியை நோக்கி பயணித்து வருகிறது. இந்த இடத்தில் நிலை கொண்டிருந்தபடி சூரியனை அது ஆய்வு செய்யவுள்ளது. சூரியனின் வெளிப்புற அடுக்குகள், வெப்பசூழல், வளி மண்டலம் மற்றும் வெப்ப நிலையின் இயக்கவியல் ஒளிவட்டம் கதிர்வீச்சு காந்தபுலம் சூரிய காற்றின் இயக்கம் மற்றும் தன்மை சூர்யனின் எக்ரே கதிர் விண்வெளியில் சூரிய இயக்கவியல் விண்வெளி காலநிலை ஆகியவற்றையும் ஆய்வு செய்யும்.

ஏற்கனவே சந்திரயான்  3 விண்கலமானது சந்திரனைத் தொட்டு விட்டது. நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாகாவும், தென் முனைப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. 

இந்த நிலையில் ஆதித்யா எல் விண்கலமானது இரண்டு அட்டகாசமான புகைப்படங்களை நமக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் ஒன்று, நமது பூமியை அது எடுத்துள்ள புகைப்படமாகும். பிரமாண்டமாக காட்சி தரும் பூமியின் ஒரு பகுதியை இதில் காண முடிகிறது. பூமிக்கு அருகே சின்னப் புள்ளியாக நிலவு தெரிகிறது.  கூடவே ஒரு செல்பியையும் ஆதித்யா எல் 1 விண்கலம் எடுத்துள்ளது. அதில் ஆதித்யா விண்கலத்தின் ஒரு பகுதி படு பிரகாசமாக தெரிகிறது.

பார்க்கவே ஜோராக உள்ள இந்த புகைப்படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமரா மூலமாக இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பூமியின் சுற்றுப் பாதையில் விடப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுப் பாதை 2 முறை அதிகரிக்கப்பட்டு 3 வது முறையாக செப்டம்பர் 10ம் தேதி உயர்த்தப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்