தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர் விருதுநகர்.. டீல் முடிவானது!

Mar 20, 2024,06:32 PM IST

சென்னை:  தேமுதிகவுக்கான தொகுதிகளை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.  இதுதொடர்பான ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் கையெழுத்திட்டனர்.


எப்படி பாஜக கூட்டணியில் பெரிய கட்சியாக பாமக இடம் பெற்றுள்ளதோ, அதேபோல அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள 2வது பெரிய கட்சி தேமுதிக. இந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக காலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டார்.




இந்த நிலையில் இன்று மாலை அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு உடன்பாடு கையெழுத்தானது. அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமியும், பிரேமலதா விஜயகாந்த்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


அதன்படி தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி தொகுதி அக்கட்சிக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் சுதீஷ் கடலூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகரில் விஜய பிரபாகரன் நிற்கலாம் என்று தெரிகிறது.


ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இந்த உறவு சிறப்பானது, முதலில் எங்களை அணுகியது அதிமுகதான். எங்களது கட்சி நிர்வாகிகளும் அதிமுகவுடன் உறவு வைக்கவே விரும்பினர். எனவே அனைவரின் ஒப்புதலோடும் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. இது தான் இயற்கையான கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்லும்.


2011 வரலாறு மீண்டும் திரும்பும். இந்தக் கூட்டணி தொடரும் இந்தத் தேர்தல் மட்டுமல்லாமல், வருகிற உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டசபைத் தேர்தல் ஆகியவற்றிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்