சென்னை: தேமுதிகவுக்கான தொகுதிகளை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதுதொடர்பான ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் கையெழுத்திட்டனர்.
எப்படி பாஜக கூட்டணியில் பெரிய கட்சியாக பாமக இடம் பெற்றுள்ளதோ, அதேபோல அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள 2வது பெரிய கட்சி தேமுதிக. இந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக காலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று மாலை அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு உடன்பாடு கையெழுத்தானது. அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமியும், பிரேமலதா விஜயகாந்த்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதன்படி தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி தொகுதி அக்கட்சிக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் சுதீஷ் கடலூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகரில் விஜய பிரபாகரன் நிற்கலாம் என்று தெரிகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இந்த உறவு சிறப்பானது, முதலில் எங்களை அணுகியது அதிமுகதான். எங்களது கட்சி நிர்வாகிகளும் அதிமுகவுடன் உறவு வைக்கவே விரும்பினர். எனவே அனைவரின் ஒப்புதலோடும் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. இது தான் இயற்கையான கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்லும்.
2011 வரலாறு மீண்டும் திரும்பும். இந்தக் கூட்டணி தொடரும் இந்தத் தேர்தல் மட்டுமல்லாமல், வருகிற உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டசபைத் தேர்தல் ஆகியவற்றிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}