சென்னை : அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்து விட்டு சென்றார். ஆனால் அந்த இரண்டு நாட்களும் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்திக்கவில்லை. அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான் சென்று அமித்ஷா உடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை டில்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்று காலை அன்புமணி தரப்பு பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் அது கிடையாதாம். நேற்று தமிழக கவர்னரை அதிமுக நிர்வாகிகளுடன் சென்று சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு அளித்ததாக சொல்லப்பட்டது.கவர்னரிடம் அதிமுக அளித்த ஊழல் பட்டியல் விபரம் இதோ...
துறை வாரியாக ஊழல் விபரம் :

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - 64,000 கோடி
ஊரக வளர்ச்சி (ம) பஞ்சாயத்து ராஜ் துறை - 60,000 கோடி
சுரங்கம் மற்றும் கனிம வளத் துறை - 60,000 கோடி
எரிசக்தித் துறை - 55,000 கோடி
கலால் வரி (டாஸ்மாக்) - 50,000 கோடி
பத்திரப்பதிவுத் துறை - 20,000 கோடி
நெடுஞ்சாலைத்துறை - 20,000 கோடி
நீர் ஆதாரத் துறை - 17,000 கோடி
சென்னை மாநகராட்சி - 10,000 கோடி
தொழிற் துறை - 8000 கோடி
பள்ளிக் கல்வித்துறை - 5000 கோடி
மக்கள் நல்வாழ்வுத் துறை - 5000 கோடி
வேளாண்மைத் துறை - 5000 கோடி
சமூக நலத்துறை - 4000 கோடி
உயர் கல்வித்துறை - 1,500 கோடி
இந்து சமய அறநிலையத்துறை - 1,000 கோடி
ஆதி திராவிடர் நலன் துறை - 1,000 கோடி
சுற்றுச் சுழல் மற்றம் வனத்துறை - 750 கோடி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை - 500 கோடி
சிறைத் துறை - 500 கோடி
சுற்றுலாத் துறை - 250 கோடி
பால் வளத்துறை - 250 கோடி
திமுக அரசின் துறை வாரியாக நடந்துள்ள ஊழல்களை பட்டியலிட்டு, அதற்கான ஆதாரங்களை நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் அளித்தது போல், இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அளிக்க போகிறாராம். அதோடு, ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்த போகிறாராம். இதற்காக தான் இந்த டில்லி பயணம் என சொல்லப்படுகிறது.
Tamil Poem: பூவே பொன்பூவே
அதிமுக மயமாகும் தவெக.. கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்.. இன்று இணைகின்றனர்!
Tamil Short Story: அழகு கோலம்!
Tamil Poem: மன(தின்)வலி
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!
தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’
Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?
பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!
{{comments.comment}}