டெல்லி: கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக கேரளம் (Keralam) என மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை இன்று தனது முறைப்படியான ஒப்புதலை வழங்கியுள்ளது.
கேரள சட்டப்பேரவையில் கடந்த 2023ம் ஆண்டு, மாநிலத்தின் பெயரை மலையாள மொழியில் அழைப்பது போலவே அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் 'கேரளம்' என மாற்ற வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு இதற்கான பரிந்துரையை அனுப்பியிருந்தது.

இதனை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. பிறகு மீண்டும் கடந்த 2024 ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை ' கேரளம்' என மாற்ற வலியுறுத்தி 2வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், சேவா தீர்த் வளாகத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கேரளாவின் பெயரை ' கேரளம்' என பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
பெயர் மாற்றத்திற்கான காரணம்
மலையாள மொழியில் அந்த மாநிலம் தொன்றுதொட்டு 'கேரளம்' என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், பிற மொழிகளில் அது 'கேரளா' என மருவிவிட்டது. தனது மாநிலத்தின் கலாச்சார மற்றும் மொழி அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ10,000 வழங்கப்படும்:எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
வேலூர் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில் தாமதமா?.. போலீஸ் தந்த விளக்கம்
ரயில் சேவை ரத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது: கனிமொழி
இனி எண்ட ஸ்டேட் கேரளா இல்ல .. கேரளம்.. பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தென் தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்... எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம்
யாரையும் காலி பண்ண வரவில்லை.. நல்ல விஷயங்களைச் செய்யவே வந்திருக்கிறேன்.. சிவகார்த்திகேயன்
{{comments.comment}}