டெல்லி: கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக கேரளம் (Keralam) என மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை இன்று தனது முறைப்படியான ஒப்புதலை வழங்கியுள்ளது.
கேரள சட்டப்பேரவையில் கடந்த 2023ம் ஆண்டு, மாநிலத்தின் பெயரை மலையாள மொழியில் அழைப்பது போலவே அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் 'கேரளம்' என மாற்ற வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு இதற்கான பரிந்துரையை அனுப்பியிருந்தது.

இதனை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. பிறகு மீண்டும் கடந்த 2024 ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை ' கேரளம்' என மாற்ற வலியுறுத்தி 2வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், சேவா தீர்த் வளாகத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கேரளாவின் பெயரை ' கேரளம்' என பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
பெயர் மாற்றத்திற்கான காரணம்
மலையாள மொழியில் அந்த மாநிலம் தொன்றுதொட்டு 'கேரளம்' என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், பிற மொழிகளில் அது 'கேரளா' என மருவிவிட்டது. தனது மாநிலத்தின் கலாச்சார மற்றும் மொழி அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}