சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், நான் எழுப்பும் கேள்விகளுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அதனையடுத்து அங்குள்ள பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆறுதல் கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், இந்த புயல் மற்றும் கனமழையால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்த அரசு முறையாக உரிய அதிகாரிகளின் மூலம் கணக்கிட்டு பாதிக்கபட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க வேண்டும். சென்னை மாநகரத்தில் 7 சென்டிமீட்டர் மழை தான் பெய்தது. இது இயல்பாக பெய்யக்கூடிய மழை தான். இதனால் 5 அல்லது 6 மணி நேரத்தில் மழை நீர் வடிந்து விட்டது.
சென்னை மாநகரத்தில் இந்த அரசின் முயற்சியால் தான் மழை நீர் வடிந்து விட்டதாக பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள், எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார். ஒரு பிரதான எதிர்க்கட்சி தலைவராக மக்களுக்கு ஏற்படுகிற பிரச்சனையை உரிய நேரத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றோம். நான் என் கடமையை தான் செய்கின்றேன். ஆனால், ஆளும் கட்சியின் முதல்வர் அதற்கு உரிய பதில்கள் அளிப்பதில்லை.
இன்றைக்கு இருக்கும் முதல்வர் நாங்கள் கூறும் பிரச்சினையை தீர்க்க முடியாத ஒரு முதல்வராக இருக்கிறார். எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான முறையில் புரிந்து கொண்டு அதற்கு தக்க நடவடிக்கை எடுத்து மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தான் ஓர் நல்ல அரசு. இதை இந்த அரசு செய்வதில்லை.
கனமழை பெய்யும் போது எல்லாம் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வடிகால் பணிகள் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. தற்போது, அது ஆமை வேகத்தில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் 2 முறை இழப்பீடு வழங்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!
முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!
தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?
அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.. அதில் ஏறுவோரும் மூழ்கடிக்கப்படுவார்கள்: செல்வப்பெருந்தகை
கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
முதல் பேச்சிலேயே தமிழ்நாட்டைத் தொட்ட பாஜக தலைவர் நிதின் நபின்.. திட்டம் என்ன?
தமிழகப் பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு: 2 நாட்களுக்கு Citizen Portal இணையதளம் செயல்படாது!
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}