கோயம்புத்தூர்: அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டது குறித்து அப்புறம் பேசறேன் தலைவா என்று தெரிவித்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உண்டான பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது அதிமுக. இந்தக் கூட்டணி உருவானது முதலே அதிமுக தொண்டர்கள் அசவுகரியமாகவே உணர்ந்த வந்தனர். இருப்பினும் அதிமுக தலைமையின் முடிவை எதிர்த்துப் பேச முடியாத நிலையே காணப்பட்டதால், தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்தது அதிமுக.
பாஜக மீதான அதிருப்தி, கோபம் எல்லாம் அதிமுக மீதும் திரும்பியதே இதற்குக் காரணம் என்று தொண்டர்கள் குமுறினர். தலைவர்கள் பலரும் கூட பாஜக மீது அதிருப்தியுடனேயே இருந்தனர். இந்த நிலையில்தான் அண்ணாமலையின் பேச்சுக்களால் அதிமுக தரப்பு அடுத்தடுத்து கடும் அதிருப்தி அடைந்தது. இந்த அதிருப்தி உச்சத்தை எட்டிய நிலையில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டது அதிமுக.
இந்த முடிவு குறித்து நடை பயணத்தில் இருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, நடைபயணத்தில் இருக்கிறேன் தலைவா. அரசியல் பேச மாட்டேன். அதிமுக அறிக்கை படித்தேன். கட்சி தலைமை இதுகுறித்து முடிவெடுக்கும்.. .அப்புறம் பேசறேன் தலைவா.. என்று கூறி முடித்துக் கொண்டார் அண்ணாமலை.
அதேசமயம், அதிமுகவின் இந்த முடிவால் பாஜகவுக்கு எந்த பாதகமும் கிடையாது என்று பல்வேறு பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டணி முறிவதற்கு நாங்கள் காரணம் கிடையாது, சில அதிமுக தலைவர்கள் பேசிய பேச்சுதான் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}