கூட்டணியை முறித்த அதிமுக.. "அப்புறம் பேசறேன் தலைவா".. அண்ணாமலை

Sep 25, 2023,06:26 PM IST

கோயம்புத்தூர்: அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டது குறித்து அப்புறம் பேசறேன் தலைவா என்று தெரிவித்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உண்டான பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது அதிமுக. இந்தக் கூட்டணி உருவானது முதலே அதிமுக தொண்டர்கள் அசவுகரியமாகவே உணர்ந்த வந்தனர். இருப்பினும் அதிமுக தலைமையின் முடிவை எதிர்த்துப் பேச முடியாத நிலையே காணப்பட்டதால், தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்தது அதிமுக.




பாஜக மீதான அதிருப்தி, கோபம் எல்லாம் அதிமுக மீதும் திரும்பியதே இதற்குக் காரணம் என்று தொண்டர்கள் குமுறினர். தலைவர்கள் பலரும் கூட பாஜக மீது அதிருப்தியுடனேயே இருந்தனர். இந்த நிலையில்தான் அண்ணாமலையின் பேச்சுக்களால் அதிமுக தரப்பு அடுத்தடுத்து கடும் அதிருப்தி அடைந்தது. இந்த அதிருப்தி உச்சத்தை எட்டிய நிலையில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டது அதிமுக.


இந்த முடிவு குறித்து நடை பயணத்தில் இருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, நடைபயணத்தில் இருக்கிறேன் தலைவா. அரசியல் பேச மாட்டேன். அதிமுக அறிக்கை படித்தேன். கட்சி தலைமை இதுகுறித்து முடிவெடுக்கும்.. .அப்புறம் பேசறேன் தலைவா.. என்று கூறி முடித்துக் கொண்டார் அண்ணாமலை.




அதேசமயம், அதிமுகவின் இந்த முடிவால் பாஜகவுக்கு எந்த பாதகமும் கிடையாது என்று பல்வேறு பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டணி முறிவதற்கு நாங்கள் காரணம் கிடையாது, சில அதிமுக தலைவர்கள் பேசிய பேச்சுதான் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்