மதுரை: செங்கோட்டையன் செல்லாத நோட்டு. அவர் ஆயிரம் பேசுவார். விஜயை எந்த நாட்டுக்கு முதல்வரக்க போகிறார் செங்கோட்டையன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், செங்கோட்டையனுக்கு வயசு என்ன தெரியுமா? இனிமே இவர் நாட்டுக்காக பேராடி என்ன செய்ய போகிறார். செங்கோட்டையன் செல்லாத நோட்டு. செல்லாத நோட்டு எதாவது பேசும். அவர் எங்க கட்சியில இருந்தவரு அவரை பற்றி நாங்கள் பேசக்கூடாது. அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஆயிரம் பேசுவார். விஜயை எந்த நாட்டுக்கு முதல்வரக்க போகிறார் செங்கோட்டையன். ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்ஜிஆர் என சொல்லிக் கொள்ளலாம். மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்.

ஆதவ் அர்ஜூனா தூய்மையின் பிறப்பிடம். நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பம் அது. அவர் பேச வேண்டியது தான். இந்த நாட்டில் ஏழைகளின் உயிரை உருச்சி அட்டைப்பூச்சியை போல் ரத்தத்தை குடித்த குடும்பம் அது. பல மாநிலங்களில் லட்டரி சீட்டை நடத்தியது அந்த குடும்பம் தான். அவர் என்ன பேசினாலும் ஒன்றும் ஆகப்போவது கிடையாது. தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதா தெரிகிறது. ஆதவ்வின் பேச்சை விஜய்யின் ரசிகர்கள் ரசிக்கலாம். மக்கள் ரசிக்க மாட்டார்கள்.
ஆதவ் அர்ஜூனா எத்தனை ஊர்களுக்கு போயி மக்கள் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார். வரும் தேர்தலில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் நேரடியான மோதல். ஊடகங்கள் எங்களை திசை மாற்றுகின்றனர். தவெகவை பற்றி எங்களிடம் எதுவும் கேட்காதீர்கள். ஒரு காலத்தில் கருணாநிதியா? எம்ஜிஆர் ரா? என்று இருந்தது. அதன்பின்னர் கலைஞரா? அம்மாவா என்று இருந்தது. இன்று ஸ்டாலினா? எடப்பாடியாரா என்று தான் உள்ளது. அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் நேரடி போட்டி என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு வழக்கு: முன்னாள் தேர்வாணையத் தலைவர் கிடாங்ணதே கைது
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
Monday Motivation: இயற்கையைக் கொ(வெ)ல்லும் செயற்கை.. நல்லதல்ல விரைந்து விழிப்படைவோம்!
{{comments.comment}}