17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்

Nov 21, 2025,06:36 PM IST

சென்னை: 17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் புதிய டபுள் டெக்கர் சேவை 2 மாதங்களில் தொடங்கும் என மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த 2008ம் ஆண்டுகளில் மக்கள் மிகவும் வியந்து பார்த்து வந்த டபுள்  டெக்கர் சேவை, சென்னையில்  2 மாதங்களில் தொடங்கும் என மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, 2 புதிய மின்சாரத்தில் இயங்கும் டபுள் டெக்கர் பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் வார நாட்களில் முக்கிய வழித்தடங்களிலும், வார இறுதி நாட்களில் பாரம்பரிய வழித்தடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாகவும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு தற்போது பேருந்து சேவையை மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பயணிகளின் தேவைக்கேற்ப அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. 




இதனையடுத்து, சென்னையில் 2 மாதங்களில் டபுள் டெக்கர் பேருந்துகள் மீண்டும் வலம் வரப்போனதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கான பணிகள் கடந்த 2023ம் ஆண்டு முதலே தொடர்ந்து நடந்து வருகிறது. இதனையடுத்து, தற்போது சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து ஒப்புதல் பெறுவதற்காக தமிழக அரசு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரையை அனுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் நிலையில், பேருந்தை இயக்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக

news

ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

news

புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

news

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

news

Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்

news

லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!

news

Om Sai.. அன்பே சாய்!

news

Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்