சென்னை : சென்னையில் நாளை (டிசம்பர் 11) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளி கல்வித்துறை, அதில் உள்ள சில சிக்கல்கள் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது.
தொடர் மழை, மிச்சாங் புயல், வெள்ளம் போன்றவற்றால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் மழை ஓய்ந்துள்ளதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் முழுமையாக பள்ளிகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9 நாட்களுக்கு பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும். அதே சமயம் 4 மாவட்டங்களிலும் 14 பள்ளிகள் மட்டும் திறக்க முடியாத நிலை உள்ளது. சென்னையில் 6 பள்ளிகள் திறக்க முடியாத நிலையில் உள்ளன. போரூர், ஐயப்பன் தாங்கல் போன்ற பகுதிகளில் சில பள்ளிகளில் தண்ணீர் இன்னும் வடியவில்லை. தண்ணீர் நிற்கும் பள்ளிகளை தவிர்த்து மற்ற பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் எப்போது அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அறையாண்டு தேர்வுகள் குறித்து இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பல பள்ளிகள் இன்னும் வெள்ளநீரில் மூழ்கி உள்ளன. பல பள்ளிகளில் புயல் காரணமாக மரங்கள் விழுந்தும், மின் விநியோகம் பாதிக்கப்பட்டும் உள்ளன. இந்த பள்ளிகளை சீராக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}