ஹரியானாவில் பரவும் கலவரம்.. போலீஸ் தடை உத்தரவு அமல்.. பலத்த பாதுகாப்பு!

Aug 01, 2023,11:48 AM IST
குருகிராம் : மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வன்முறை, கலவரம் சம்பவங்கள் நடந்து நாட்டையே உலுக்கி வரும் நிலையில், தற்போது அரியானா மாநிலத்திலும் வன்முறை, கலவரம் வெடித்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

அரியானாவின் நுஹ் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த மத ஊர்வலத்தை தடுக்க முயன்ற போலீஸ் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக மசூதி ஒன்றில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கலவரம் அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் பரவி உள்ளது. இதனால் பல இடங்களிலும் இரு மதத்தினரிடையே மோதல் வெடித்து வருகிறது.

அரியானாவில் இது வரை நடந்த மத கலவரம், மோதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பேலீசாரின் வாகனங்கள், தனியார் வாகனங்கள் உள்ளிட்டவைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் அரியானா முழுவதும் பதற்றம் நிலவுகிறது. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மத வழிபாட்டு தலங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மக்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அதிகமானவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூட போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 20 க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்