சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தனித்து நின்று போட்டியிட்டு எங்களை விட அதிக வாக்குகளைப் பெற்றுக் காட்டி விட்டால் நாம் தமிழர் கட்சியையே கலைத்து விடுகிறேன் என்று சீமான் விடுத்திருக்கும் சவாலைத் தொடர்ந்து பாஜக - நாம் தமிழர் கட்சியினர் இடையே அனல் பறக்கும் வாக்குவாதம் மூண்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகதான் மூன்றாவது பெரிய கட்சி என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே என்று நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, தனிச்சு நில்லுங்க, சிங்கமா நிக்கணும், கூட்டணி சேர்க்கக் கூடாது. அப்படிப் போட்டியிட்டு எங்களை விட அதிக வாக்குகள் வாங்கிக் காட்டட்டும்.. நான் என் கட்சியையே கலைச்சுர்றேன்.. பிறகு தெரியும் யார் பெரிய கட்சின்னு என்று சவால் விடுத்திருந்தார். தொடையைத் தட்டி அவர் விட்ட இந்த அதிரடி சவால் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
கட்சியை கலைச்சுராதீங்க.. காமெடி போய் விடும்
சீமானின் இந்த சவாலுக்கு மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றுவிட்டால் கட்சியை கலைத்து விடுவதாக வாய்ச்சவடால் விட்டிருக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கு வேண்டுகோள்.
நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழப்பதையும், பாஜக பல தொகுதிகளில் வெற்றி பெறுவதையும் உங்கள் கண் முன்னால் பார்க்க இருக்கிறீர்கள்.
ஆனால், அதற்கெல்லாம் ரோசப்பட்டு கட்சியை கலைத்து விட வேண்டாம். தமிழக அரசியல் களத்தில் நகைச்சுவை உணர்வு, கதை சொல்லும் பண்பு போன்றவை காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் பதிலடி கொடுத்துள்ளார். அவரது எக்ஸ் தளப் பதிவு:
அள்ளி அளந்து விட்ட அண்ணாமலை - இடும்பாவனம் கார்த்திக்
யார் எதைப் பேசுவது எனும் விவஸ்தை இல்லையா சகோதரரே?
"நான் மனிதப்பிறவியே இல்லை; பயோலாஜிக்கலாகப் பிறக்கவில்லை" எனக் கூறிப் பெற்ற தாயையே கொச்சைப்படுத்தும் நரேந்திரமோடியைத் தலைமையேற்றுக் கொண்டு கதைகளைப் பற்றியும், பொய்களையும் பற்றியும் பேசலாமா?
தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட பாஜக வெற்றிபெறப் போவதில்லை என்பது அண்ணாமலையே அறிந்த உண்மை. கோவையில் மண்ணைக் கவ்வப்போவதை முன்கூட்டியே அறிந்துதான், 'கிணத்தைக் காணோம்' என வடிவேலு சொன்னக் கதை போல, ஒரு இலட்சம் வாக்காளர்களைக் காணவில்லை என அள்ளி அளந்துவிட்டார் உங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை. தோல்வியை முன்கூட்டியே அறிந்து, ரெடிமேட் காரணத்தைத் தயார் செய்ததோடு நிற்காது, கோவையில் மட்டும் தேர்தல் முடிவுகளை வெளியிட தடைவிதிக்கக்கோரி ஆள் வைத்து நீதிமன்றத்தில் மனு போட்டார். தன்னைவிட அதிக வாக்குகள் வாங்கிவிடுவோரோ? எனும் பயத்தில் நயினாரைப் போட்டுக் கொடுத்தார்.
இப்போது ஒரு இடம்கூட தேறாது என அறிந்து, அடக்கி வாசிக்கிறார். பாஜகவைவிட நாம் தமிழர் கட்சி குறைவான வாக்குகளைப் பெற்றுவிட்டால் கட்சியைக் கலைத்துவிடுகிறேன் என அண்ணன் சீமான் அவர்கள் சவால் விடுத்திருக்கிறார்.
வெற்றிபெறுவோம் என நீங்கள் பேசுவது உண்மையென்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லையென்றால், மாநிலத்தலைவர் பொறுப்பைவிட்டு விலகுகிறேன் என உங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பேசச் சொல்லுங்கள்.. பார்ப்போம்..
அதைச் சொல்லத் துணிவு இருக்கா? திராணி இருக்கா? என்று கேட்டுள்ளார் இடும்பாவனம் கார்த்திக்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}