இன்று முதல் அக்னி நட்சத்திரம்.. உஷாரா வெளியில் போங்க மக்களே!

May 04, 2023,09:22 AM IST

சென்னை: கத்திரி வெயில் என்று செல்லமாக அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல்  தொடங்குகிறது.

வெயில் காலம் எனப்படும் கோடை காலம் உச்சத்தைத் தொடப் போகிறது என்பதன் அடையாளம்தான் அக்னி நட்சத்திர காலம். இந்த காலகட்டத்தில் வெயில் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி மே 29ம் தேதி வரை நீடிக்கும்.

25 நாட்கள் நீடிக்கப்போகும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் சற்று அதிகமாக இருக்கும். எனவே வெளியில் நடமாடுவோர் உரியவழிமுறைகளைப் பின்பற்றி உடல் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்.

தேவையில்லாத வெளிநடமாட்டத்தைக் குறைக்க வேண்டும். குறிப்பாக பகல் பொழுதுகளில் அதிகம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சன்ஸ்டிரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலுக்குள்ளாக நேரிடும். அதிக அளவில் தண்ணீர், இளநீர், தர்பூஸ், மோர் போன்றவற்றைக் குடிக்கலாம்.

ஃபிரிட்ஜில் வைத்து எதையும் குடிக்காதீர்கள். அது உடல் நலனைப் பாதிக்கும். அதற்குப் பதில் இளநீ  ,மோர், மண்பானை தண்ணீர் போன்றவற்றை அருந்தலாம். அவை ஆரோக்கியத்திற்கு நல்லது. சூடான பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். சிக்கன் உணவையும் குறைத்தால் நல்லது. பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் தற்போது கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. வங்கக் கடலிலும் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவாகவுள்ளது. எனவே இந்த முறை அக்னி நட்சத்திர காலகட்டம் சற்று வெம்மை குறைந்து காணப்படும் என்று எதிர்பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்