சென்னை: தமிழக முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு உயர்தர அதிநவீன வசதிகளுடன் கூடிய திரையரங்கு அனுபவத்தை குறைந்த செலவில் தர வேண்டும் என்ற நோக்கில் ஏஜிஎஸ் குழுமம் இன்று முதல் கடலூரில் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கை தொடங்கியுள்ளது.
இந்தத் திரையரங்கை ஏஜிஎஸ் குழுமம் சார்பில் ஐஸ்வர்யா கல்பாத்தி திறந்து வைத்தார்.
ஏஜிஎஸ் நிறுவனம் திரைப்பட தயாரிப்பு பணிகளை தொடர்ந்து, தற்போது கடலூரில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்குகளை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு திரையரங்குகளை ஏஜிஎஸ் நிறுவனம் தொடங்கியது. இதன் மூலம் திரையரங்கு வணிகத்திலும் கால் பதித்தது.
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தலைமையில், ஏஜிஎஸ் குழுமம் தற்போது சென்னை மகாபலிபுரம் சாலை, தி.நகர், மதுரவாயில், உள்ளிட்ட பல பகுதிகளில் 18 ஸ்கிரீன்களைக் கொண்ட திரையரங்குகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது கடலூரில் மிகப் பிரபலமான கிருஷ்ணாலயா தியேட்டர் புதுப்பொலிவுடன் தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கை ஏஜிஎஸ் குழுமம் சார்பாக ஐஸ்வர்யா கல்பாத்தி திறந்து வைத்தார்.
கண் கவரும் 4கே டிஜிட்டல் ஸ்கிரீன், காதுகளுக்கு விருந்தளிக்கும் டால்பி அட்மாஸ் சவுண்ட் என அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலேயே இல்லாத அளவில் உலகத்தரம் வாய்ந்த தியேட்டராக இது மாற்றப்பட்டுள்ளது.
கடலூர் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கை தொடர்ந்து தமிழக முழுவதும் ரசிகர்களுக்காக குறைந்த செலவில் திரையரங்கு அனுபவத்தை தர வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!
சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
{{comments.comment}}