எடப்பாடி பழனிச்சாமிக்கு "புரட்சித் தமிழர்" பட்டம்.. மதுரை மாநாட்டில் புதுப் பட்டம்!

Aug 20, 2023,09:44 AM IST
மதுரை: மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு இன்று  கோலாகலமாக நடந்தேறியது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித் தமிழர் என்ற புதிய பட்டம் சூட்டப்பட்டது.

மண்டேலா நகர், ரிங் ரோட்டில் அதிமுகவின் எழுச்சி மாநாடு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.  கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தும், அமைதிப் புறாவைப் பறக்க விட்டும் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 

எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளி செங்கோல் தரப்பட்டது. தொண்டர்களின் அன்பு மழையில் நனைந்தபடி எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி வைத்தார். கட்சிக் கொடி நிறத்திலான பலூன்களும் அப்போது பறக்க விடப்பட்டது.

மாநாட்டில் இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதற்கு முன்பாக அவருக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இதைக் கேட்டதும் மாநாட்டு  அரங்கில் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகத்தில் கூச்சலிட்டு மகிழ்ந்தனர்.

நிரம்பி வழிந்த ஹோட்டல்கள்



மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிமுக தொண்டர்கள் ரயில்கள், பஸ்கள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை வந்து குவிந்திருந்தனர். அனைவரும் தங்குவதற்காக விடுதிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  இதனால் மதுரை முழுவதும் லாட்ஜ்கள், ஹோட்டல்கள் நிரம்பி வழிந்தன.
      ‌
அதிமுக  பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பதால் பெரும்  தடபுடலாக இதை ஏற்பாடு செய்திருந்தனர். மாநாட்டில் கலந்து கொள்வோருக்கு காலை சிற்றுண்டியும், மதியம் விதவிதமான உணவுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உணவுகளை சமைப்பதற்காக சமையல்காரர்கள், உதவியாளர்கள், உணவு பரிமாறுபவர் என பத்தாயிரம் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

சூப்பர் சாப்பாடு



உணவு வழங்க உள்ள மூன்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.. அமர்ந்து சாப்பிட டேபிள் நாற்காலிகளும் 10 லட்சம் பேர் குடிப்பதற்காக 300 மில்லி லிட்டர் தண்ணீர் மற்றும் தண்ணீர் பாட்டில்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மேலும் பந்தல் அருகே ஆங்காங்கே தற்காலிக கழிப்பறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

விழாவை சிறப்பிக்க கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் மற்றும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் திரைப்படங்களையும்,கட்சியின் வரலாறு,  சிறப்புகள் போன்ற நிகழ்வுகளையும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு



மாநாட்டையொட்டி  மதுரை முழுவதும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லும் வாகனங்களுக்கு மாற்று பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மதுரை அதிமுக மாநாட்டால் மதுரை புறநகர்ப் பகுதிகளிலும், மதுரைக்குள்ளும் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.


சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்