எடப்பாடி பழனிச்சாமிக்கு "புரட்சித் தமிழர்" பட்டம்.. மதுரை மாநாட்டில் புதுப் பட்டம்!

Aug 20, 2023,09:44 AM IST
மதுரை: மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு இன்று  கோலாகலமாக நடந்தேறியது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித் தமிழர் என்ற புதிய பட்டம் சூட்டப்பட்டது.

மண்டேலா நகர், ரிங் ரோட்டில் அதிமுகவின் எழுச்சி மாநாடு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.  கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தும், அமைதிப் புறாவைப் பறக்க விட்டும் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 

எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளி செங்கோல் தரப்பட்டது. தொண்டர்களின் அன்பு மழையில் நனைந்தபடி எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி வைத்தார். கட்சிக் கொடி நிறத்திலான பலூன்களும் அப்போது பறக்க விடப்பட்டது.

மாநாட்டில் இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதற்கு முன்பாக அவருக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இதைக் கேட்டதும் மாநாட்டு  அரங்கில் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகத்தில் கூச்சலிட்டு மகிழ்ந்தனர்.

நிரம்பி வழிந்த ஹோட்டல்கள்



மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிமுக தொண்டர்கள் ரயில்கள், பஸ்கள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை வந்து குவிந்திருந்தனர். அனைவரும் தங்குவதற்காக விடுதிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  இதனால் மதுரை முழுவதும் லாட்ஜ்கள், ஹோட்டல்கள் நிரம்பி வழிந்தன.
      ‌
அதிமுக  பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பதால் பெரும்  தடபுடலாக இதை ஏற்பாடு செய்திருந்தனர். மாநாட்டில் கலந்து கொள்வோருக்கு காலை சிற்றுண்டியும், மதியம் விதவிதமான உணவுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உணவுகளை சமைப்பதற்காக சமையல்காரர்கள், உதவியாளர்கள், உணவு பரிமாறுபவர் என பத்தாயிரம் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

சூப்பர் சாப்பாடு



உணவு வழங்க உள்ள மூன்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.. அமர்ந்து சாப்பிட டேபிள் நாற்காலிகளும் 10 லட்சம் பேர் குடிப்பதற்காக 300 மில்லி லிட்டர் தண்ணீர் மற்றும் தண்ணீர் பாட்டில்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மேலும் பந்தல் அருகே ஆங்காங்கே தற்காலிக கழிப்பறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

விழாவை சிறப்பிக்க கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் மற்றும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் திரைப்படங்களையும்,கட்சியின் வரலாறு,  சிறப்புகள் போன்ற நிகழ்வுகளையும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு



மாநாட்டையொட்டி  மதுரை முழுவதும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லும் வாகனங்களுக்கு மாற்று பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மதுரை அதிமுக மாநாட்டால் மதுரை புறநகர்ப் பகுதிகளிலும், மதுரைக்குள்ளும் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.


சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்