மதுரை பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை

Jul 17, 2023,02:40 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்து வந்த சந்திரப்பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.


பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை காரணமாக பதட்டம் நிலவுவதால் அந்தக் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு நான்காவது முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் சந்திரப்பாண்டியன். இவரது சொந்த ஊர் மாவூத்துப்பட்டி ஆகும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.


இவரது மகள் வீடு லிங்கவாடியில் உள்ளது. மகளைப் பார்ப்பதற்காக தனது வீட்டிலிருந்து டூவீலரில் போயுள்ளார் சந்திரப்பாண்டியன். பாலமேட்டை நெருங்கி வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக சந்திரப்பாண்டியனை அரிவாளால் வெட்டியது. இதில் சந்திரப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


பாலமேடு போலீஸார் விரைந்து வந்து சந்திரப்பாண்டியன் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குற்றவாளிகள் யார்  என்று தெரியவில்லை. ஆனால் பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலமேடு பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவூத்துப்பட்டியிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்