மதுரை பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை

Jul 17, 2023,02:40 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்து வந்த சந்திரப்பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.


பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை காரணமாக பதட்டம் நிலவுவதால் அந்தக் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு நான்காவது முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் சந்திரப்பாண்டியன். இவரது சொந்த ஊர் மாவூத்துப்பட்டி ஆகும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.


இவரது மகள் வீடு லிங்கவாடியில் உள்ளது. மகளைப் பார்ப்பதற்காக தனது வீட்டிலிருந்து டூவீலரில் போயுள்ளார் சந்திரப்பாண்டியன். பாலமேட்டை நெருங்கி வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக சந்திரப்பாண்டியனை அரிவாளால் வெட்டியது. இதில் சந்திரப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


பாலமேடு போலீஸார் விரைந்து வந்து சந்திரப்பாண்டியன் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குற்றவாளிகள் யார்  என்று தெரியவில்லை. ஆனால் பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலமேடு பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவூத்துப்பட்டியிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்