மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்து வந்த சந்திரப்பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை காரணமாக பதட்டம் நிலவுவதால் அந்தக் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு நான்காவது முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் சந்திரப்பாண்டியன். இவரது சொந்த ஊர் மாவூத்துப்பட்டி ஆகும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.
இவரது மகள் வீடு லிங்கவாடியில் உள்ளது. மகளைப் பார்ப்பதற்காக தனது வீட்டிலிருந்து டூவீலரில் போயுள்ளார் சந்திரப்பாண்டியன். பாலமேட்டை நெருங்கி வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக சந்திரப்பாண்டியனை அரிவாளால் வெட்டியது. இதில் சந்திரப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலமேடு போலீஸார் விரைந்து வந்து சந்திரப்பாண்டியன் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை. ஆனால் பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலமேடு பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவூத்துப்பட்டியிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!
சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
{{comments.comment}}