மழை பெய்யதான் செய்யும்.. மதுரையை தார்பாய் போட்டா மூட முடியும்.. கடிந்து கொண்ட செல்லூர் ராஜு!

Nov 09, 2024,01:04 PM IST

மதுரை: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட செல்லூர் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகளை பார்வையிட்ட போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மழை பெய்ய தான் செய்யும். மதுரையை தார்ப்பாய் போட்டா மூட முடியும் என அதிகாரிகளை கடிந்து பேசினார்.


மதுரையில் கடந்த 1970 ஆம் ஆண்டு 99 மில்லி மீட்டர் மழை பதிவானது.  54 வருடங்களுக்குப் பிறகு  அக்டோபர் மாதத்தில் 99.5 மில்லி மீட்டர் அதிக மழை பெய்துள்ளது. குறிப்பாக மதுரை மாவட்டம் செல்லூர் தொகுதியில் இரண்டு மணி நேரத்திலேயே  4.5 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குடியிருப்புகள் தண்ணீர் புகுந்தது.  அதேபோல் மழை நீர் அப்பகுதிகள் முழுவதும் ஆக்கிரமித்து சாலைகள் சேதமடைந்தன. 


இதனால் இப்பகுதிகளில் பாதாள சாக்கடை வசதிகள் முறையாக இல்லாததால் தான்  மழைநீருடன் சேர்ந்து கழிவு நீரும் குடியிருப்பு பகுதிகள் சென்று, அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. இதனால் அப்பகுதியை சீர் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கை எழுந்தன. இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்ற அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இப்பகுதியில் சீரமைப்பு பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.




இந்த நிலையில், மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஏன் பணிகள் மந்தமாக நடக்கிறது..? மழை பெய்ய தான் செய்யும். அதற்கு மதுரையை தார்ப்பாய் போட்டு மூட முடியுமா.. என அதிகாரிகளை கடிந்து கொண்டார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,  நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை கூறி இருக்கிறது. அது முல்லை நகர் பகுதிகளுக்கு மட்டும் சொல்லவில்லை. மதுரையில் உள்ள எல்லா இடங்களுக்கும் தான். இப்படி செய்ய வேண்டும் என்றால் முதலில் மதுரை உயர்நீதிமன்ற கிளையை தான் அகற்ற வேண்டும். அது நீர் நிலையில்தான் இருக்கிறது.


30 நாட்களாக சாக்கடை நீர் நிறைந்துள்ளது. ஏன் அமைச்சர் வந்து பார்க்க கூடாதா. இன்னைக்கு தொற்றுநோய் வந்துவிட்டது. நான் சொன்ன மாதிரி எல்லா நோயும் பரவி வருகிறது. இங்குள்ள மக்கள் சாதாரண எளிய மக்கள். முதல்வர் முதலில் மாவட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். ஒவ்வொரு துறை ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டார். அப்ப மதுரையில் எந்தெந்த பகுதிகள் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகள் என்பதை கண்டறிந்து சொல்லி இருப்பார்கள். அதற்கான தீர்வுகளில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.


இந்த அரசு பெயரளவில் தான் நடைபெற்று வருகிறது. எங்ககிட்ட கூட்டணி பலம் இருக்கிறது என சொல்கிறது. இந்த அரசாங்கத்தின் மீது  இருக்கும் வெறுப்பு காரணமாக எல்லா கூட்டணி கட்சியினரும் வெள்ளத்தில் அடித்து செல்ல போகிறார்கள். இதுதான் நடக்கப் போகிறது என காரசாரமான விவாதங்களை முன் வைத்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உயர்வில் நேற்று இருந்த தங்கம் இன்று குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?

news

திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!

news

உசேன் போல்ட்.. என்னா வேகமா ஓடிட்டிருந்தாரு.. இப்ப என்ன பண்ணிட்டிருக்காரு பாருங்க!

news

இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!

news

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 17, 2025... இன்று பணம் தாராளமாக வரும்

news

Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!

news

தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை

news

வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்