சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பை தொடர்ந்து, அதிமுகவினரின் பேச்சு நடவடிக்கைகளில் ஒரு உற்சாகம் தெரிகிறது. இதன் மூலம் அதிமுக பாஜக இடையான கூட்டணி உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பை தொடர்ந்து அதிமுக வட்டாரத்தில் உற்சாகம் நிலவி வருகிறது. இப்பொழுதே கூட்டணி முடிவாகி விட்டதாக அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், எண்ணி செயல்பட துவங்கி விட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது பேசு பொருளாகியுள்ளது. ஆனால் அந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசவே இல்லை என்று நேற்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். அதேசமயம், அதிமுக தலைவர்களின் பேச்சு நடவடிக்கைகள் பாஜக உடனான கூட்டணி உறுதியாகி விட்டது என்பதையே சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
ஒருபுறம், அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புகழ்ந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்தியாவின் இரும்பு மனிதர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. எட்டு கோடி தமிழர்களுடைய ஒரே நம்பிக்கை. உலகத் தமிழர்களின் அடையாளம் புரட்சித்தலைவர் ஐயா எடப்பாடி அவர்கள் இந்திய தேசத்தின் இரும்பு வைரம் என்று வர்ணிக்க கூடிய மாண்புமிகு மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களை நேரடியாக சந்தித்தது இன்று இந்திய நாட்டிலேயே கவனத்தை ஈர்த்திருக்கக் கூடிய தலைப்புச் செய்தியாக மாறி இருப்பது ஏன் என்று எண்ணிப் பார்க்கிறோம் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பாஜகவுக்கு மீண்டும் பட்டுக் கம்பளம் விரிக்க அதிமுக தயாராகி விட்டதையே உணர்த்துவதாக உள்ளது.
மறுபுறம், இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்த பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே மணி மற்றும் அருளுடன் அதிமுக எம்எல்ஏ திண்டுக்கல் சீனிவாசன் ஜாலியாக பேசிக்கொண்டே வந்தார். அவர் அருகில் இருந்த பாமக எம்எல்ஏ சதாசிவத்திடம், "அதிமுக, பாமக, அப்புறம் பாஜக என்று சிரித்துக் கொண்டே பேசி வந்தார். இதைப் பார்த்த செய்தியாளர்கள் அவரிடம், கூட்டணி உறுதியாகி விட்டதா என்று கேட்டபோது, நாங்க கூட்டணிங்க என்று சொல்லி விட்டு குஷியோடு போனார் திண்டுக்கல் சீனிவாசன்.
இப்படி அதிமுக மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து பாஜக அதிமுக கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகளை கூறிவரும் நிலையில் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி உறுதியாகிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. இப்போதைக்கு கூட்டணி குறித்து பகிரங்கமாக சொல்லிக்காமல் இருப்போம். சில மாதங்கள் கழித்து கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று அதிமுக பாஜக தலைமை முடிவெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், இந்தக் கூட்டணியை மக்கள் ஏற்க வேண்டும் என்றால் மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்றும் அதிமுக தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டுள்ளதாம். எனவே அதற்கேற்றார் போல முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}