சங்கரன்கோவில்: அதிமுக என்பது அப்போது நெல்லிக்காய் மூட்டை.. நாங்க இல்லாட்டி சிதறிப் போயிருப்பாங்க. இபிஎஸ் இன்று பொறுப்பில் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பாஜக. அதை மறந்தால் அவர் நன்றி மறந்தவர் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடுமையாக சாடியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்து விட்டது. அதை அதிமுகவினர் கொண்டாடிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாஜக அமைதி காக்கிறது. இந்த நிலையில் சங்கரன்கோவில் வந்த மூத்த தலைவர் எச். ராஜா இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
பட்டாசு வெடித்துக் கொண்டாட 10 பேர் போதும். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அன்றைக்கு நாங்க ஒட்டி வைக்காட்டி அதிமுக நெல்லிக்காய் மூட்டை, சிதறிப் போயிருக்கும். அநாவாசியமாக பேசக் கூடாது. இன்று இபிஎஸ் பொறுப்பில் இருக்கிறார் என்றால் பாஜகதான் காரணம். அதை அவர் மறந்தால் நன்றி மறந்தவர் என்று அர்த்தம்.
அதிமுக நெல்லிக்காய் மூட்டை. போட்டுக் கயிற்கை கட்டி பிடிச்சு வச்சு கை வலிச்சது எங்களுக்குத்தான் தெரியும். ஆளாளுக்கு பேசறாங்களே.. அப்போது நான் சாட்சியா இருந்தேனே. இவர்களை இணைத்து வைத்த சாட்சியாக நான் இருந்தேன். அதனால பெரிய சாதனையெல்லாம் பண்ணதா நினைக்க வேண்டாம்.
மத்தியில் பிஜேபி ஆளுங்கட்சி.. மாநிலத்தில் திமுக ஆளுங்கட்சி. அதிமுக எங்கே இருக்கு.. சொல்லுங்க.. அதிமுக எங்கே இருக்கு. முடிந்தது முடிந்ததுன்னுா.. அதிமுக இன்றோடு முடிந்தது. அப்படித்தான் எடுத்துக்கணும். நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, இபிஎஸ் அதை போட்டுடைத்தான்டி என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் கண்டிப்பாக இதை பின்னர் உணர்வார்கள். அவர்களது செயல்களுக்குரிய பலனை அனுபவிப்பார்கள் என்றார் எச். ராஜா.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}