சங்கரன்கோவில்: அதிமுக என்பது அப்போது நெல்லிக்காய் மூட்டை.. நாங்க இல்லாட்டி சிதறிப் போயிருப்பாங்க. இபிஎஸ் இன்று பொறுப்பில் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பாஜக. அதை மறந்தால் அவர் நன்றி மறந்தவர் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடுமையாக சாடியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்து விட்டது. அதை அதிமுகவினர் கொண்டாடிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாஜக அமைதி காக்கிறது. இந்த நிலையில் சங்கரன்கோவில் வந்த மூத்த தலைவர் எச். ராஜா இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
பட்டாசு வெடித்துக் கொண்டாட 10 பேர் போதும். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அன்றைக்கு நாங்க ஒட்டி வைக்காட்டி அதிமுக நெல்லிக்காய் மூட்டை, சிதறிப் போயிருக்கும். அநாவாசியமாக பேசக் கூடாது. இன்று இபிஎஸ் பொறுப்பில் இருக்கிறார் என்றால் பாஜகதான் காரணம். அதை அவர் மறந்தால் நன்றி மறந்தவர் என்று அர்த்தம்.
அதிமுக நெல்லிக்காய் மூட்டை. போட்டுக் கயிற்கை கட்டி பிடிச்சு வச்சு கை வலிச்சது எங்களுக்குத்தான் தெரியும். ஆளாளுக்கு பேசறாங்களே.. அப்போது நான் சாட்சியா இருந்தேனே. இவர்களை இணைத்து வைத்த சாட்சியாக நான் இருந்தேன். அதனால பெரிய சாதனையெல்லாம் பண்ணதா நினைக்க வேண்டாம்.
மத்தியில் பிஜேபி ஆளுங்கட்சி.. மாநிலத்தில் திமுக ஆளுங்கட்சி. அதிமுக எங்கே இருக்கு.. சொல்லுங்க.. அதிமுக எங்கே இருக்கு. முடிந்தது முடிந்ததுன்னுா.. அதிமுக இன்றோடு முடிந்தது. அப்படித்தான் எடுத்துக்கணும். நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, இபிஎஸ் அதை போட்டுடைத்தான்டி என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் கண்டிப்பாக இதை பின்னர் உணர்வார்கள். அவர்களது செயல்களுக்குரிய பலனை அனுபவிப்பார்கள் என்றார் எச். ராஜா.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}