புதுடில்லி : ஏர்இந்தியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி மீது, குடி போதையில் இருந்த சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததற்காக அந்த போதை ஆசாமிக்கு 30 நாட்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 26 ம் தேதி நியூயார்க்கில் இருந்து டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பிசினஸ் கிளாஸ் பிரிவில் பயணம் செய்துள்ளார். இரவு உணவிற்கு பிறகு குறைவான வெளிச்சம் கொண்ட விளக்குகள் மட்டுமே எரிய விடப்பட்டுள்ளன. அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த போதை ஆசாமி, அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேராக வந்து சிறுநீர் கழித்துள்ளார்.
மற்றொரு பயணி நகர சொல்லும் வரை அந்த நபர் அதே இடத்திலேயே நின்றுள்ளார். இச்சம்பவம் பற்றி விமான ஊழியர்களிடம் அந்த பெண் புகார் அளித்துள்ளார். தன்னுடைய உடை, ஷூ, பை என அனைத்தும் சிறுநீரால் நனைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் விமான ஊழியர்கள் அந்த பெண்ணிற்கு வேறு உடை, செருப்பு போன்றவற்றை மாற்றிக் கொடுத்து, வேறு இடம் காலியாக இல்லாததால் அதே இருக்கையில் மீண்டும் உட்காரச் சொல்லி உள்ளனர்.
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
{{comments.comment}}