அகமதாபாத் : அகமதாபாத்தில் 200 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளாகி உள்ளது. இதில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது பற்றி தெரியவில்லை.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் மேகனின்நகரில் ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானது. லண்டன் கேட்விக்கிற்குப் புறப்பட்டுச் சென்ற இந்த விமானத்தில் 240க்கும் மேற்பட்ட பயணிகளும் ஊழியர்களும் இருந்தனர். சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதாகவும், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகள் அங்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்-லண்டன் கேட்விக் இடையே இயக்கப்பட்ட விமானம் AI171 விபத்தில் சிக்கியது. நாங்கள் விவரங்களைச் சேகரித்து வருகிறோம். கூடிய விரைவில் எங்கள் எக்ஸ் பக்கத்தில் (X handle) மேலும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம்" என்று தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் மற்றும் குஜராத் காவல்துறை தலைவரிடம் பேசியுள்ளார். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளது. சம்பவ இடத்தில் 12 தீயணைப்பு வண்டிகள் உள்ளன.
முன்னாள் பஞ்சாப் முதல்வர் மற்றும் சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "அகமதாபாத் விமான விபத்தால் அதிர்ச்சியடைந்தேன். அனைத்து பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
விமான விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதி அருகில் விமான விபத்து நடைபெற்றுள்ளது. பத்தில் காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}