ஏர் இந்தியா ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டும்.. டாடா சன்ஸ் தலைவர் அதிருப்தி

Jan 08, 2023,02:02 PM IST
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் முதிய வயது  பெண் பயணியிடம் மும்பையைச் சேர்ந்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவத்தில், விமான ஊழியர்கள் இன்னும் சுதாரிப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் கூறியுள்ளார்.

நவம்பர் 26ம் தேதி நியூயார்க்கிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சங்கர் மிஸ்ரா என்ற நபர், தனது இருக்கைக்கு அருகில் பயணித்த 70 வயதான பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அந்தப் பெண் மீது சிறுநீர் கழித்து பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் மிகுந்த தாமதமாக நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.




இந்த விவகாரம் குறித்து டாடா சன்ஸ் தலைவர்  சந்திரசேகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏர் இந்தியாவின் நடவடிக்கை துரிதமாக இருந்திருக்க வேண்டும். இன்னும் சுதாரிப்போடு செயல்பட்டிருக்க வேண்டும். நாம் சூழலைப் புரிந்து கொண்டு சுதாரிப்பாக செயல்படத் தவறி விட்டோம். இப்படி நடந்திருக்கக் கூடாது. பயணிகளின் பாதுகாப்புக்கு டாடா குழுமமும், ஏர் இந்தியாவும் பொறுப்பானவர்கள்.  அதை மனதில்கொண்டு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து  நிறுவனம் தீர ஆராயும். தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று சந்திரசேகரன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்