ஏர் இந்தியா ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டும்.. டாடா சன்ஸ் தலைவர் அதிருப்தி

Jan 08, 2023,02:02 PM IST
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் முதிய வயது  பெண் பயணியிடம் மும்பையைச் சேர்ந்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவத்தில், விமான ஊழியர்கள் இன்னும் சுதாரிப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் கூறியுள்ளார்.

நவம்பர் 26ம் தேதி நியூயார்க்கிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சங்கர் மிஸ்ரா என்ற நபர், தனது இருக்கைக்கு அருகில் பயணித்த 70 வயதான பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அந்தப் பெண் மீது சிறுநீர் கழித்து பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் மிகுந்த தாமதமாக நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.




இந்த விவகாரம் குறித்து டாடா சன்ஸ் தலைவர்  சந்திரசேகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏர் இந்தியாவின் நடவடிக்கை துரிதமாக இருந்திருக்க வேண்டும். இன்னும் சுதாரிப்போடு செயல்பட்டிருக்க வேண்டும். நாம் சூழலைப் புரிந்து கொண்டு சுதாரிப்பாக செயல்படத் தவறி விட்டோம். இப்படி நடந்திருக்கக் கூடாது. பயணிகளின் பாதுகாப்புக்கு டாடா குழுமமும், ஏர் இந்தியாவும் பொறுப்பானவர்கள்.  அதை மனதில்கொண்டு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து  நிறுவனம் தீர ஆராயும். தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று சந்திரசேகரன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்