உலக வங்கியின் தலைவராகும் இந்தியர் அஜய்பால் சிங் பங்கா... யார் இவர்?

May 04, 2023,10:12 AM IST
டெல்லி: உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்தியாவைச் சேர்ந்த அஜய்பால் சிங் பங்கா பதவியேற்கிறார்.

தற்போது தலைவராக இருக்கும் டேவிட் மல்பாஸ் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு அஜய்பால் சிங் பங்கா வருகிறார்.  

அஜய்பால் சிங் பங்கா தற்போது ஜெனரல் அட்லான்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். இதற்கு முன்பு மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் தலைவராகவும், அதன் தலைமை செயலதிகாரியாகவும் 11 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.



63வயதாகும் அஜய்பால் சிங் பங்கா நெஸ்லே நிறுவனத்தில் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கியவர். பத்து வருடங்கள் அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்துள்ளார்.

பங்காவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. புனேவில்தான் பிறந்தார் பங்கா. படித்தது டெல்லியில். அகமதாபாத் ஐஐஎம்மில் எம்பிஏ முடித்தார். நெஸ்லேவில் பணியைத் தொடங்கிய பின்னர் பெப்சிகோவில் இணைந்தார். அந்த நிறுவனம் இந்தியாவில் பாஸ்ட் புட் தயாரிப்புகளை தொடங்க உதவி புரிந்தார்.

1996ம் ஆண்டு  சிட்டிகுரூப் நிறுவனத்தில் இணைந்தார். அந்த நிறுவனத்தின் ஆசியா பசிபிக் பிராந்தியத் தலைவராக  2008ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மாஸ்டர்கார்ட் நிறுவனத்தில் இணைந்தார். 

அஜய் பங்காவுக்கு 2016ம் ஆண்டு இந்தியஅரசு பத்மஸ்ரீ விருது கொடுத்துக் கெளரவித்துள்ளது.  இதேபோல பல்வேறு சர்வதேச விருதுகளையும் பங்கா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்