அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

Jul 15, 2025,06:14 PM IST

சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக  மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார்.  இவர் கடந்த மாதம் 28ம் தேதி கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தார். 


இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அப்போது இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் காவல்துறைக்கு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்தின் பிறப்பு உறுப்பு, வாய், காதுகளில் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளது. இந்த அரசு வழக்கை உணர்வு பூர்வமாக எடுத்து நியாயமான விசாரணையை சிபிசிஐடியின் சிறப்புக்குழுவாள் நடத்த வேண்டும். 




சட்ட விரோத மரணத்திற்கு காரணமான உயர் அதிகாரி உள்ளிட்ட அனைவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அஜித் குமார் கொலை வழக்கில் அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு கூறியுள்ளது. வரும் காலங்களில் எந்த இடத்திலும் காவல்துறை இதுபோல நடந்து கொள்ளக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அஜித்குமார் மரணத்திற்கு காரணமானவர்களாக கூறப்பட்ட 6 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அஜித்குமார் மரண வழக்கில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி.ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இவர் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக சென்னை தலைமையகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!

news

ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?

news

பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

news

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்

news

திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!

news

இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!

news

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்