டெல்லி: நடிகர் அஜீத் குமார் தனது ரேசிங் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஷூ லேஸை கட்டி விட்ட வீடியோ வெளியாகி அவரது ரசிகர்கள் அதைக் கொண்டாடி வருகின்றனர்.
அஜீத் குமார் எது செய்தாலும் தற்போது செய்தியாகிறது, பேசப்படுகிறது, வைரலாக்கப்படுகிறது. அவரது நடிப்பில் வெளியான விடாமுயற்சி தற்போது வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ரேஸுக்காக போர்ச்சுகல் போயுள்ளார் அஜீத். அங்கு அவர் செய்த செயல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தனது ரேசிங் டீமைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஷுூ லேசை கீழே அமர்ந்து கட்டி விட்டு ஹெல்ப் செய்துள்ளார் அஜீத். எந்த ஈகோவும் பார்க்காமல் அவர் செய்த இந்த செயலை யாரோ வீடியோ எடுத்து வெளியிட அது இப்போது வைலராகி விட்டது. இந்த வீடியோவில் அஜீத் ரேசிங் உடையில் இருக்கிறார்.
தன்னை கேமரா படம் பிடிப்பதைக் கூட தெரியாமல் அஜீத் ஈகோ பார்க்காமல் இதைச் செய்துள்ளார். இதெல்லாம் ரத்தத்தில் இருப்பது என்று சிலர் கமெண்ட் கொடுத்துள்ளனர்.
அஜீத் குமார் நடிப்பில் அடுத்து குட் பேட் அக்லி படம் ரெடியாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகிக் கொண்டுள்ளது. கடந்த 30 வருடமாக நடித்து வரும் அஜீத் குமார் தற்போது ரேசிலும் அதிக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}