Ranchi Test: எடுத்த எடுப்பிலேயே டாப்புக்குப் போன ஆகாஷ் தீப்.. வேற லெவல் Debut!

Feb 23, 2024,06:43 PM IST
ராஞ்சி: ராஞ்சியில்  நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் அறிமுக பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அசத்தலாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அறிமுகமாகியிருக்கிறார். முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

இந்தப் போட்டியில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீசினார். அவரது பந்து வீச்சை எதிர்கொண்ட ஜாக் கிரான்லி கிளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப் துள்ளி குதித்தார்.  தொடர்ந்து பென் டக்கெட்டையும் அபாரமாக அவுட்டாக்கினார் ஆகாஷ் தீப். அவரது மூன்றாவது விக்கெட்டாக வந்தவர்   ஒல்லி போப். எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் போப். அதுவும் டக் அவுட்டானார். தனது முதல் போட்டியிலேயே ஒரு போல்டு, ஒரு கேட்ச், ஒரு எல்பிடபிள்யூ என அசத்தினார் ஆகாஷ் தீப்.



தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அதிரடி காண்பித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார். ஐபிஎல் பெங்களூரு அணிக்காக இவர் விளையாடுவதால் ஆர்.சி.பி.ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஏழ்மையான பின்னணி

இந்தியாவின் 313வது டெஸ்ட் வீரராக அறிமுகம் ஆகியிருக்கும் ஆகாஷ் தீப், பீகார் மாநிலம் சசராம் என்ற ஊரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயது முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இவர், குடும்பத்தின் வறுமை காரணமாக கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கியிருந்தார். தனது மாமா கொடுத்த ஊக்கத்தால் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பினார். 

துர்காபூரில் ஓர் அகாடமியில் சேர்ந்து, தனது வேகத்தின் மூலம் அங்கிருந்த பயிற்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். மீண்டும் இவரது வாழ்க்கையில் விதி விளையாடியது. குறுகிய காலத்தில் தந்தை மற்றும் அண்ணனை இழந்தார். இதனால் மீண்டும் 3 ஆண்டுகள் கிரிக்கெட்டை மறந்து விட்டு வேலைக்கு சென்றார் ஆகாஷ் தீப். ஆனாலும் அவரை கிரிக்கெட் விடவில்லை. மீண்டும் தனது விடாமுயற்சியால் அதற்காக பாடுபட்ட அவர் இன்று, தனது முதல் போட்டியிலேயே நாடறிந்த கிரிக்கெட் முகமாக மாறியுள்ளார். இவரது கடந்த காலமும், அவர் கடந்து வந்த பாதையும், ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது எனலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்