2 கர்ப்பப் பை.. 2 குழந்தைகள்.. அடுத்தடுத்து பிரசவம்.. அதிசயிக்க வைத்த அமெரிக்க பெண்!

Dec 24, 2023,07:34 AM IST

அலபாமா: அமெரிக்காவில் இரண்டு கருப்பைகளுடன் கூடிய ஒரு பெண் அடுத்தடுத்து 2 குழந்தைகளைப் பிரசவித்து மருத்துவ உலகை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளார்.


மருத்துவ உலகில் இதுபோல நடப்பது மிக மிக  அரிதானது. அலபாமாவைச் சேர்ந்த கெல்சி ஹேட்சர் என்ற அந்தப் பெண்ணுக்கு 2 கருப்பைகள் உள்ளன. இந்தப் பெண் ஒரே சமயத்தில் 2 குழந்தைகளைக் கருத்தரித்தார். இப்போது அடுத்தடுத்து  2 பெண் குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார். 2 நாட்கள் இடைவெளியில் இந்த குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தக் குழந்தைகளுக்கு ராக்ஸி லாய்லா, ரிபெல் லேகன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.


முதல் குழந்தை 19ம் தேதி  இரவு 7.49 மணிக்குப் பிறந்தது. 3வது குழந்தை 20ம் தேதி காலை 6.09 மணிக்குப் பிறந்துள்ளது.  இரண்டு குழந்தைகளும் சரியான எடையில் நலமாக உள்ளனவாம். இது அவருக்கு நான்காவது பிரசவமாகும். 17 வயதில்தான் தனக்கு இரண்டு கர்ப்பப் பைகள் இருப்பது கெல்சிக்கு தெரிய வந்தது. 


அலபாமா பல்கலைக்கழக மருத்துவமனையில் இந்த அதிசயக் குழந்தைகள் பிரசவம் நடந்தது. இதுகுறித்து கெல்சி கூறுகையில், எனது மிராக்கிள் குழந்தைகள் வந்து விட்டனர். இவர்கள் வெற்றிகரமாக வெளியில் வர டாக்டர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு நன்றிகள் என்று கூறியுள்ளார் கெல்சி.




பிறந்த இரு குழந்தைகளும் fraternal twins எனப்படும் இரட்டைக் குழந்தைகள்  என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற இரட்டைக் கர்ப்பப் பையுடன் இருக்கும் பெண்கள் மிக மிக அரிதானவர்கள். 2019ம் ஆண்டு வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இதுபோல இரட்டைக் கர்ப்ப பைகளுடன் கருத்தரித்திருந்தார். ஆனால் அவருக்கு குழந்தைகள் குறைப் பிரசவமாக பிறந்தன.


ஆனால் கெல்சிக்கு இதுவரை பிறந்த அத்தனை குழந்தைகளுமே ஆரோக்கியமாக உள்ளனர். ஒருமுறை கூட  அவருக்கு அபார்ஷன் ஆனதில்லையாம்.  மேலும் இதுவரை நடந்த 4 பிரசவமுமே அவருக்கு நார்மல் பிரசவம்தான் என்பது இன்னொரு ஆச்சரியமாகும்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்