ஹைதராபாத்: புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜூன் கிட்டத்தட்ட ரூ.300 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 படம் நாளை வெளியாக உள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் தான் புஷ்பா 2. இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இதன் அட்வான்ஸ் புக்கிங் தற்போது 100 கோடியை தாண்டியுள்ளதாம். அதை விட அதிக வசூலை அல்லு அர்ஜூனின் ஸ்டார்டம் முதல் நாளில் ஈட்டித் தரும் என்றும் சொல்லப்படுகிறது.

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் 350 கோடி செலவில் எடுக்கப்பட்ட நிலையில், இன்றளவும் அதன் வசூல் வெறும் 110 கோடி என்று செல்லப்பட்டு வருகிறது. கங்குவா படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த நிலையில், கங்குவா படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய படமான புஷ்பா 2 படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அல்லு அர்ஜூனின் ஸ்டார்டம் காரணமாக அட்வான்ஸ் புக்கிங்கிலேயே இதுவரை 100 கோடி வசூல் செய்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் நாள் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறிய நடிகர் அல்லு அர்ஜூன், புஷ்பா 2 படத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ளார். புஷ்பா 2 படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ரூ.300 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய நடிகர்களில் இதற்கு முன்னர் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களான விஜய் மற்றும் ஷாருக்கான் சம்பளம் 275 கோடி என்ற நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் புஷ்பா 2 படத்தின் மூலம் 300 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
புஷ்பா 2 மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஆனால் அல்லு அர்ஜூனின் சம்பளம் இதை விட அதிகமாகவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்
எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
நீலத்திரைக்கடலோரம்!
{{comments.comment}}