ஹைதராபாத்: புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜூன் கிட்டத்தட்ட ரூ.300 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 படம் நாளை வெளியாக உள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் தான் புஷ்பா 2. இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இதன் அட்வான்ஸ் புக்கிங் தற்போது 100 கோடியை தாண்டியுள்ளதாம். அதை விட அதிக வசூலை அல்லு அர்ஜூனின் ஸ்டார்டம் முதல் நாளில் ஈட்டித் தரும் என்றும் சொல்லப்படுகிறது.
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் 350 கோடி செலவில் எடுக்கப்பட்ட நிலையில், இன்றளவும் அதன் வசூல் வெறும் 110 கோடி என்று செல்லப்பட்டு வருகிறது. கங்குவா படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த நிலையில், கங்குவா படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய படமான புஷ்பா 2 படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அல்லு அர்ஜூனின் ஸ்டார்டம் காரணமாக அட்வான்ஸ் புக்கிங்கிலேயே இதுவரை 100 கோடி வசூல் செய்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் நாள் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறிய நடிகர் அல்லு அர்ஜூன், புஷ்பா 2 படத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ளார். புஷ்பா 2 படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ரூ.300 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய நடிகர்களில் இதற்கு முன்னர் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களான விஜய் மற்றும் ஷாருக்கான் சம்பளம் 275 கோடி என்ற நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் புஷ்பா 2 படத்தின் மூலம் 300 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
புஷ்பா 2 மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஆனால் அல்லு அர்ஜூனின் சம்பளம் இதை விட அதிகமாகவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}