ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா

Feb 28, 2026,05:30 PM IST

சென்னை: தனது கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் தங்களது விவாகரத்து மனுவில் முக்கியக் கோரிக்கையாக, ஊடகங்களில் தனது திருமண விவகாரம் குறித்து விவாதிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சங்கீதா கோரிக்கை வைத்துள்ளார்.


நடிகரும்  தவெக தலைவருமான விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளார். இது பேசு பொருளாகியுள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவில் ஒரு முக்கியக் கோரிக்கையை நீதிமன்றத்திற்கு அவர் வைத்துள்ளார். அதைப் பற்றி யாருமே பேசவில்லை. 


சங்கீதா தாக்கல் செய்துள்ள மனு பிரமாணப் பத்திரத்தின் 8வது பக்கத்தில் இடம் பெற்றுள்ள அந்த முக்கியக் கோரிக்கை இதுதான்:




இந்த மனுவின் உட்பொருள் மிகவும் உணர்வுப்பூர்வமானது என்பதால், இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர், எதிர்மனுதாரர் மற்றும் அவர்களது குழந்தைகளின் கண்ணியம், தனி privacy மற்றும் நற்பெயரைப் பாதுகாப்பது அவசியமாகும் என மனுதாரர் கருதுகிறார். எனவே, இந்த வழக்கின் முழு நடவடிக்கைகளையும் ரகசியமாக (In-camera) நடத்துவதற்கு இந்த மாண்புமிகு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வேண்டுகிறார். 


மேலும், இந்த வழக்கு தொடர்பான நேர்காணல்கள், பொது விவாதங்கள் அல்லது அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் இது குறித்த செய்திகளை வெளியிடுவதிலிருந்து சமூக வலைதளங்கள், யூடியூப் சேனல்கள், ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் இதர ஊடகங்களுக்குத் தடை விதித்து இந்த மாண்புமிகு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு (Interim Order of Injunction) பிறப்பிக்காவிடில், மனுதாரரும் அவரது குடும்பத்தினரும் மேன்மேலும் அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாவார்கள் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.


தற்போது சங்கீதா அஞ்சியது போலவே நடந்து விட்டது. நேற்று இந்த செய்தி வெளியானது முதலே டிவி சானல்கள், யூடியூப் சானல்களில் கடுமையான விவாதங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்