சென்னை: திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வெற்றி நடைபோட்ட அமரன் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அமரன். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.கடந்த தீபாவளிக்கு வெளியான இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் கிட் அடித்துள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி இப்படத்திற்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் கடந்த 2014ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தனது இன்னுயிரை தியாகம் செய்தார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது அமைந்துள்ளது. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது.
உலக அளவில் சுமார் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் ரூ.42.3 கோடி வசூலித்தது. இந்த படம் வெளியான 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது இதன் வசூல் 350 கோடியை நெருங்கி வருகின்றது.
இந்நிலையில் அமரன் திரைப்படம் டிசம்பர் 5 (இன்று) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நெட்பிளிக்ஸில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் உரிமையை ரூ.60 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாம். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது.
தியேட்டர்களில் இன்னும் கூட வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் தற்போது வீடுகளிலும் வெற்றி நடை போட வந்து விட்டது அமரன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்
"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு
TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!
ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!
அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
கிரீடம் அணிந்த மொட்டுகள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
இமயமலையில் அவதரித்த.. தனித்துவ மலர்.. பிரம்ம கமலம்!
{{comments.comment}}