அச்சச்சோ.. ஜெகன் மோகன் கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்திலேயே ரிசைன் செய்த அம்பட்டி ராயுடு!

Jan 06, 2024,06:33 PM IST
அமராவதி: ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்திலேயே அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து அனைவரையும் குழப்பியடித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பட்டி ராயுடு.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் அம்பட்டி ராயுடு. இந்திய கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர். ஐபிஎல் போட்டிகளிலும் அதிரடியாக ஆடியவர். கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இவருக்கு நிலையான இடம் கிடைக்கவில்லை. இந்த விரக்தியில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார் அம்பட்டி ராயுடு. இந்த சீசனில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம் பெறவில்லை.



இந்த நிலையில் கடந்த வாரம் ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து அவரது கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் அம்பட்டி ராயுடு. ஆனால் இன்று திடீரென அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கொஞ்ச காலத்திற்கு தான் அரசியலிருந்து விலகியிருக்க விரும்புவதாக அவர் காரணம் தெரிவித்துள்ளார். ஆனால் சேர்ந்த வேகத்தில் விலக வேண்டும் என்றால் ஏதாவது பெரிய காரணம் இருக்க வேண்டும்.. ஏதாவது நிர்ப்பந்தம் வந்ததா.. யாரேனும் மிரட்டினரா என்று பல்வேறு கேள்விகளை சமூக வலைதளத்தில் பலரும் எழுப்பி வருகின்றனர்.



ஆந்திர மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. லோக்சபா தேர்தலும் வரவுள்ளது. இந்த நிலையில்தான் அம்பட்டி ராயுடு ஜெகன் மோகன் கட்சியில் சேர்ந்திருந்தார். அவர் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அவர் போன வேகத்திலேயே ரிட்டர்ன் ஆகி விட்டார்.

என்ன மாயமோ, என்ன காரணமோ.. ராயுடுவுக்கே வெளிச்சம்!

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்