சென்னை: சென்னை அருகே அம்பத்தூரில் வீட்டில் ஏசி தீப்பிடித்து எரிந்து வயர்கள் எரிந்து வந்த புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஹாலினா (51). இவரது மகள் நஸ்ரியா (16). நேற்று இரவு வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்து விட்டு தாயும் மகளும் படுத்துத் தூங்கப் போயுள்ளனர்.
ஏசி போட்டு தூங்கியுள்ளனர். இந்த நிலையில் ஏசி மெஷினில் மின்சாரக் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஏசி மெஷினில் ஏற்பட்ட தீயால் வயர்கள் தீப்பிடித்து எரிந்து அந்த அறை முழுக்க தீ பரவியது. புகையும் பரவியது. இதில் ஹாலினாவும், நஸ்ரியாவும் சிக்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தாய் மகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல ஏசி மெஷினில் தீப்பிடிக்கும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஏசி மெஷின்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்தால் இதுபோன்ற விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதாக ஏசி மெக்கானிக்குகள் எச்சரிக்கிறார்கள். முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
{{comments.comment}}