Vijay Speech: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா.. விஜய் என்ன பேசுவார்.. பரபரக்கும் அரசியல் களம்!

Dec 06, 2024,11:29 AM IST

சென்னை : சென்னையில் இன்று (டிசம்பர் 06) நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்க உள்ளார். இந்த விழாவில் இவர் என்ன பேச போகிறார் என்பது தான் தற்போது தமிழக அரசியல் களத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவரும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும், சட்ட மேதையுமான டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 06ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1956 ம் ஆண்டு அம்பேத்கர் மறைந்தார். அன்று துவங்கி இது பீம் ஜெயந்தி, அம்பேத்கர் ஜெயந்தி என பல பெயர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அவரது 78வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவாக சென்னையில் நூல் வெளியீட்டு விழா நடத்தப்பட உள்ளது.



"அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" எனும் தலைப்பில் வெளியிடப்பட இந்த நூல் 36 கட்டுரையாளர்களின் தொகுப்பாக வெளியிடப்பட உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் அம்பேத்கர் பற்றிய நேர்காணலும் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்க உள்ளதால், தான் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து, அதற்கு விளக்கமும் அளித்துள்ளார் திருமாவளவன்.  அதே சமயம் விஜய் பங்கேற்க உள்ளது எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. 

இன்று மாலை 5 மணியளவில் நந்தம்பாக்கம், வர்த்தக மைய அரங்கில் விழா நடைபெறவுள்ளது. விஜய் அரசியலுக்கு வருகிறார், கட்சி துவங்குகிறார் என்றதும் ஆரம்பத்தில், இது சினிமாத்துறையில் எம்.ஜி.ஆர் தொட்டு காலம் காலமாக நடப்பது தானே என நினைக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை மிக பிரம்மாண்டமாகவும், வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் இருந்தது விஜய் மீதான அரசியல் கண்ணோட்டம் அனைவரிடமும் மாறி உள்ளது. அதிலும் முதல் மாநாட்டில் விஜய் பேசிய அனல் தெரிக்கும் பேச்சு, மாநாடு முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை பேசப்பட்டு வருகிறது. 

விழுப்புரம் மாநாட்டிற்கு பிறகு விஜய் கலந்து கொள்ளப் போகும் பொது நிகழ்ச்சி என்றால் அது இன்று நடக்க போகும் அம்பேத்கர் நூல் வெளியீடு விழா தான். மாநாட்டு மேடையில் அரசியல் பேசி விட்டார். ஆனால் இந்த மேடை அப்படி கிடையாது. இது விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் நன்கு தெரியும். இந்த விழாவில் விஜய் பேசப் போகும் பேச்சு தான் அவரது அரசியல் பயணத்தின் அடுத்த அடியாக இருக்க போகிறது. அதனால் இந்த விழாவில் அவர் என்ன பேசுவார்? யாரை ஈர்க்கும் நோக்கத்துடன் அவரது பேச்சு இருக்கும்? இன்று விஜய் பேச போகும் பேச்சிற்கு பிறகு அவரை பற்றிய திருமாவளவன், சீமான் போன்ற அரசியல் தலைவர்களின் கண்ணோட்டம் மாறுமா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளையும், எதிர்பார்ப்புகளை எழுப்பி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்