ஒடிசாவில்.. சாப்பிடக் கூட வழியில்லை.. வறுமையின் கொடுமை.. 7 வயது பேரனை 200க்கு விற்ற மூதாட்டி!

Mar 21, 2025,06:11 PM IST

பூரி: ஒடிசாவில் வீடு இல்லாமலும், சாப்பிடக் கூட வழியில்லாத கொடுமையான வறுமையில் வாடும் மூதாட்டி ஒருவர் தனது ஏழு வயது பேரனை 200 ரூபாய்க்கு விற்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஒடிசா மாநிலம் பாட்டியா கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டி சோரன் ராய்ப்பால் என்பவர் கடுமையான வறுமையில் இருந்துள்ளார். இவருடன் அவரது 7 வயது பேரன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு வீடு இல்லை, நிலம் இல்லை, எந்த ஒரு அரசாங்க நிதி உதவியும் கிடைக்கவில்லை. இதனால் மூதாட்டி தனது பேரனுக்கு உணவு கொடுக்க கூட கையில் பணம் இல்லாமல் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.


மூதாட்டியின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மகனும் காணாமல் போனார். மருமகள் கோவிட்-19 தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் மூதாட்டி ஒற்றை ஆளாக இருந்து தனது பேரனை யாசகம் பெற்று பேரனை வளர்க்க மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தார். தனது பேரனை வளர்க்க தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று உதவி கோரினார். ஆனால் சகோதரியின் உடல் நிலையும் மோசமான காரணத்தால் தனது பேரனை தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை. 




இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், தனது 7  பேரனை 200 ரூபாய்க்கு விற்றுள்ளார் பாட்டி. இதனை அறிந்த உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த குழந்தைகள் பாதுகாப்புத் துறை மற்றும் ரஸ்கோவிந்த்பூர் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலக அதிகாரிகள் மூதாட்டியை சந்தித்து விசாரித்தார். 


அப்போது அந்த மூதாட்டி குழந்தையை நிதி ஆதாயத்திற்காக விற்கவில்லை. குழந்தையை இனிமேல் பராமரிக்க முடியாததால், தனது பேரனுக்காவது வீடும் சிறந்த பராமரிப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு தம்பதியினரிடம் ரூபாய் 200 க்கு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். அதே சமயத்தில் மூதாட்டிக்கு அரசு உதவிகள் வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்