ஒடிசாவில்.. சாப்பிடக் கூட வழியில்லை.. வறுமையின் கொடுமை.. 7 வயது பேரனை 200க்கு விற்ற மூதாட்டி!

Mar 21, 2025,06:11 PM IST

பூரி: ஒடிசாவில் வீடு இல்லாமலும், சாப்பிடக் கூட வழியில்லாத கொடுமையான வறுமையில் வாடும் மூதாட்டி ஒருவர் தனது ஏழு வயது பேரனை 200 ரூபாய்க்கு விற்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஒடிசா மாநிலம் பாட்டியா கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டி சோரன் ராய்ப்பால் என்பவர் கடுமையான வறுமையில் இருந்துள்ளார். இவருடன் அவரது 7 வயது பேரன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு வீடு இல்லை, நிலம் இல்லை, எந்த ஒரு அரசாங்க நிதி உதவியும் கிடைக்கவில்லை. இதனால் மூதாட்டி தனது பேரனுக்கு உணவு கொடுக்க கூட கையில் பணம் இல்லாமல் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.


மூதாட்டியின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மகனும் காணாமல் போனார். மருமகள் கோவிட்-19 தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் மூதாட்டி ஒற்றை ஆளாக இருந்து தனது பேரனை யாசகம் பெற்று பேரனை வளர்க்க மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தார். தனது பேரனை வளர்க்க தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று உதவி கோரினார். ஆனால் சகோதரியின் உடல் நிலையும் மோசமான காரணத்தால் தனது பேரனை தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை. 




இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், தனது 7  பேரனை 200 ரூபாய்க்கு விற்றுள்ளார் பாட்டி. இதனை அறிந்த உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த குழந்தைகள் பாதுகாப்புத் துறை மற்றும் ரஸ்கோவிந்த்பூர் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலக அதிகாரிகள் மூதாட்டியை சந்தித்து விசாரித்தார். 


அப்போது அந்த மூதாட்டி குழந்தையை நிதி ஆதாயத்திற்காக விற்கவில்லை. குழந்தையை இனிமேல் பராமரிக்க முடியாததால், தனது பேரனுக்காவது வீடும் சிறந்த பராமரிப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு தம்பதியினரிடம் ரூபாய் 200 க்கு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். அதே சமயத்தில் மூதாட்டிக்கு அரசு உதவிகள் வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்