சென்னை: நடிகை அனந்திகா தனது எதிர்கால கனவு குறித்துக் கூறியுள்ளதை அவரது ரசிகர்கள் வரவேற்றுக் கொண்டாடி பாராட்டி வருகிறார்கள்.
கேரளாவைச் சேர்ந்தவர் அனந்திகா சனில்குமார். லால் சலாம் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை. இப்போது மலையாளம், தெலுங்கு என பிசியாக இருந்து வருகிறார். இவர் லேட்டஸ்டாக நடித்துள்ள படம் 8 வசந்தலு. இப்படத்தின் வருகைக்காக காத்திருக்கிறார் அனந்திகா.
படம் தொடர்பான புரமோஷன்களிலும் பங்கேற்று வருகிறார். அப்படி ஒரு புரமோஷனின்போது அவர் பேசும்போது தனது வருங்காலக் கனவுகள் குறித்தும் தனது ஆசையை பகிர்ந்திருந்தார். அதுதான் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனந்திகா அந்த பேட்டியில் கூறும்போது, எனக்கு சினிாவைத் தவிர நிறைய விருப்பங்கள் உள்ளன. அதில் முக்கியமானது அரசியல். எஸ்.. நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர விரும்புகிறேன். பெண்கள் அரசியலுக்கு வருவது புதிதல்லதான். ஆனால் இப்போது நான் வர மாட்டேன். எனக்கு 40 வயதாகட்டும். அதன் பிறகுதான் வருவேன். அதில் நிறைய சாதிக்க வேண்டும் என்பது கனவுகளில் ஒன்று என்று கூறியுள்ளார் அனந்திகா.
எல்லாத் துறைகளையும் போலத்தான் அரசியலும். முன்பு பெண்கள் அரசியலுக்கு வரவே பயப்படுவார்கள். ஆணாதிக்கம் மிகுந்த துறையாக அரசியல் இருந்ததே அதற்குக் காரணம். இப்போதும் கூட அப்படித்தான். பெண்களுக்கு முழுமையான அதிகாரத்தை இன்னும் ஆணாதிக்க அரசியல் தரவில்லைதான். ஆனாலும் அரசியலுக்கு வரும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் அனந்திகாவும் அரசியலுக்கு வரும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
40 வயதில்தான் வரப் போவதாக கூறியுள்ளார். அதற்குள் தென்னிந்திய மொழிகளில் ஒரு சூப்பர் ரவுண்டு வந்து விடுவார். பிரபலமும் ஆகி விடுவார். எனவே, அவர் எதிர்காலத்தில் எந்த மாநில அரசியலுக்கு வருவார்.. கேரளாவா, தமிழ்நாடா அல்லது ஆந்திராவா என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாகியுள்ளது.
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்: நயினார் நாகேந்திரன்
சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife
கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!
சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்
4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு
{{comments.comment}}