சென்னை: நடிகை அனந்திகா தனது எதிர்கால கனவு குறித்துக் கூறியுள்ளதை அவரது ரசிகர்கள் வரவேற்றுக் கொண்டாடி பாராட்டி வருகிறார்கள்.
கேரளாவைச் சேர்ந்தவர் அனந்திகா சனில்குமார். லால் சலாம் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை. இப்போது மலையாளம், தெலுங்கு என பிசியாக இருந்து வருகிறார். இவர் லேட்டஸ்டாக நடித்துள்ள படம் 8 வசந்தலு. இப்படத்தின் வருகைக்காக காத்திருக்கிறார் அனந்திகா.
படம் தொடர்பான புரமோஷன்களிலும் பங்கேற்று வருகிறார். அப்படி ஒரு புரமோஷனின்போது அவர் பேசும்போது தனது வருங்காலக் கனவுகள் குறித்தும் தனது ஆசையை பகிர்ந்திருந்தார். அதுதான் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனந்திகா அந்த பேட்டியில் கூறும்போது, எனக்கு சினிாவைத் தவிர நிறைய விருப்பங்கள் உள்ளன. அதில் முக்கியமானது அரசியல். எஸ்.. நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர விரும்புகிறேன். பெண்கள் அரசியலுக்கு வருவது புதிதல்லதான். ஆனால் இப்போது நான் வர மாட்டேன். எனக்கு 40 வயதாகட்டும். அதன் பிறகுதான் வருவேன். அதில் நிறைய சாதிக்க வேண்டும் என்பது கனவுகளில் ஒன்று என்று கூறியுள்ளார் அனந்திகா.
எல்லாத் துறைகளையும் போலத்தான் அரசியலும். முன்பு பெண்கள் அரசியலுக்கு வரவே பயப்படுவார்கள். ஆணாதிக்கம் மிகுந்த துறையாக அரசியல் இருந்ததே அதற்குக் காரணம். இப்போதும் கூட அப்படித்தான். பெண்களுக்கு முழுமையான அதிகாரத்தை இன்னும் ஆணாதிக்க அரசியல் தரவில்லைதான். ஆனாலும் அரசியலுக்கு வரும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் அனந்திகாவும் அரசியலுக்கு வரும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
40 வயதில்தான் வரப் போவதாக கூறியுள்ளார். அதற்குள் தென்னிந்திய மொழிகளில் ஒரு சூப்பர் ரவுண்டு வந்து விடுவார். பிரபலமும் ஆகி விடுவார். எனவே, அவர் எதிர்காலத்தில் எந்த மாநில அரசியலுக்கு வருவார்.. கேரளாவா, தமிழ்நாடா அல்லது ஆந்திராவா என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாகியுள்ளது.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}