சென்னை : பாமக.,வில் இருந்து அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாக தலைமை நிலைய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பாமக.,வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராக இருப்பவர் ஜி.கே.மணி. இவர் கட்சிக்கு எதிராக சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்டும், இந்த குற்றத்திற்காக ஏன் அவரை கட்சியின் கெளரவ தலைவர் பதவியில் இருந்து நீக்கக் கூடாது என கேட்டும் ஜி.கே.மணிக்கு டிசம்பர் 18ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் பதிலளிக்காததால், இன்று அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி தரப்பின் இந்த அறிவிப்பால் பாமக.,வில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. பாமக.,வின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசிற்கு மிகவும் நெருக்கமானவராகவும் பல ஆண்டுகளாக இருந்து வரும் மூத்த தலைவர் ஜி.கே.மணி. அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளதற்கு ராமதாஸ் தரப்பின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாமக.,வில் அடுத்து என்ன நடக்கும், கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.. 7 விக்கெட்களுக்கு 175 ரன்கள்
பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!
நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!
சிவமே சிவமே அருள்வாய் சிவமே....!
அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?
அற்புதங்கள் நிறைந்த .. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலைப்பயணம்!
Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!
சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!
கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?
{{comments.comment}}