மார்கழி 26 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 26 : மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

Jan 09, 2025,05:00 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 26 :


மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.




பொருள் :


பக்தர்கள் மீது மிகவும் அன்பு கொண்ட திருமாலே! நீல நிற மணியின் நிறத்தவனே! உயரிய பக்தி நிறைந்தவர்கள் காலம் காலமாக மேற் கொள்ளப்படும் மார்கழி பாவை நோன்பை கடைபிடிப்பவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் தருபவனே! உலகையே அதிர வைக்கும் வகையில் பால் சாத நிறத்தில் இருக்கும் உன்னுடைய பாஞ்சஜான்யம் போன்ற வலம்புரி சங்குகளையும், பெரியமுரசுகளையும், இசைத்து, கற்றறிந்த பலரும் உன்னை போற்றி பல்லாண்டு பாடியும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! இந்த நோன்பை நல்ல படியாக நிறைவு செய்வதற்காக உன்னுடைய அருளை தந்து இந்த நோன்பு முழுமை அடைய அருள் புரிய வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

news

வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?

news

CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்

news

4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்

news

பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!

news

ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?

news

பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?

news

14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்