மார்கழி 28 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 28 : கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

Jan 11, 2025,04:41 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 28 :


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை

சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே

இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.




பொருள் :


குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று, அவற்றை மேய்த்து, தயிர் சாதம் உண்டு வாழ்ந்து வருபவர்கள். பெரிய அளவில் அறிவு ஏதும் இல்லாதவர்கள். ஆனால் ஒன்றும் மட்டும் எங்களுக்கு தெரியும். ஆயர் குலத்தில் தோன்றிய உன்னை தலைவனான அடைந்ததால் எங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைத்து, வைகுண்டம் அடையும் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியாக தெரியும். பிறவிப் பயனாக இதை நாங்கள் அடைந்துள்ளோம். உன்னுடன் எங்களுக்கு உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது. விரதம் இருக்கும் சரியான முறை தெரியாத அறியாத சிறு பிள்ளைகள் நாங்கள். கண்ணா, மணிவண்ணா, கருணாகரா என்றெல்லாம் உன்னை உரிமையுடன் உன் மீது கொண்ட பக்தியால் அழைத்தோம். உன்னை ஒருமையில் அழைத்தததற்காக எங்கள் மீது கோபித்து கொள்ளாதே. எங்களின் இறைவனே! எங்களின் இந்த நோன்பை ஏற்றுக் கொண்டு, எங்களுக்கு உன்னுடைய அருளை தருவாயாக.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்