- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 28 :
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள் :
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று, அவற்றை மேய்த்து, தயிர் சாதம் உண்டு வாழ்ந்து வருபவர்கள். பெரிய அளவில் அறிவு ஏதும் இல்லாதவர்கள். ஆனால் ஒன்றும் மட்டும் எங்களுக்கு தெரியும். ஆயர் குலத்தில் தோன்றிய உன்னை தலைவனான அடைந்ததால் எங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைத்து, வைகுண்டம் அடையும் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியாக தெரியும். பிறவிப் பயனாக இதை நாங்கள் அடைந்துள்ளோம். உன்னுடன் எங்களுக்கு உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது. விரதம் இருக்கும் சரியான முறை தெரியாத அறியாத சிறு பிள்ளைகள் நாங்கள். கண்ணா, மணிவண்ணா, கருணாகரா என்றெல்லாம் உன்னை உரிமையுடன் உன் மீது கொண்ட பக்தியால் அழைத்தோம். உன்னை ஒருமையில் அழைத்தததற்காக எங்கள் மீது கோபித்து கொள்ளாதே. எங்களின் இறைவனே! எங்களின் இந்த நோன்பை ஏற்றுக் கொண்டு, எங்களுக்கு உன்னுடைய அருளை தருவாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
{{comments.comment}}