- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 28 :
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள் :
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று, அவற்றை மேய்த்து, தயிர் சாதம் உண்டு வாழ்ந்து வருபவர்கள். பெரிய அளவில் அறிவு ஏதும் இல்லாதவர்கள். ஆனால் ஒன்றும் மட்டும் எங்களுக்கு தெரியும். ஆயர் குலத்தில் தோன்றிய உன்னை தலைவனான அடைந்ததால் எங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைத்து, வைகுண்டம் அடையும் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியாக தெரியும். பிறவிப் பயனாக இதை நாங்கள் அடைந்துள்ளோம். உன்னுடன் எங்களுக்கு உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது. விரதம் இருக்கும் சரியான முறை தெரியாத அறியாத சிறு பிள்ளைகள் நாங்கள். கண்ணா, மணிவண்ணா, கருணாகரா என்றெல்லாம் உன்னை உரிமையுடன் உன் மீது கொண்ட பக்தியால் அழைத்தோம். உன்னை ஒருமையில் அழைத்தததற்காக எங்கள் மீது கோபித்து கொள்ளாதே. எங்களின் இறைவனே! எங்களின் இந்த நோன்பை ஏற்றுக் கொண்டு, எங்களுக்கு உன்னுடைய அருளை தருவாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!
ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
{{comments.comment}}