- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 28 :
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
பொருள் :
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று, அவற்றை மேய்த்து, தயிர் சாதம் உண்டு வாழ்ந்து வருபவர்கள். பெரிய அளவில் அறிவு ஏதும் இல்லாதவர்கள். ஆனால் ஒன்றும் மட்டும் எங்களுக்கு தெரியும். ஆயர் குலத்தில் தோன்றிய உன்னை தலைவனான அடைந்ததால் எங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைத்து, வைகுண்டம் அடையும் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியாக தெரியும். பிறவிப் பயனாக இதை நாங்கள் அடைந்துள்ளோம். உன்னுடன் எங்களுக்கு உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது. விரதம் இருக்கும் சரியான முறை தெரியாத அறியாத சிறு பிள்ளைகள் நாங்கள். கண்ணா, மணிவண்ணா, கருணாகரா என்றெல்லாம் உன்னை உரிமையுடன் உன் மீது கொண்ட பக்தியால் அழைத்தோம். உன்னை ஒருமையில் அழைத்தததற்காக எங்கள் மீது கோபித்து கொள்ளாதே. எங்களின் இறைவனே! எங்களின் இந்த நோன்பை ஏற்றுக் கொண்டு, எங்களுக்கு உன்னுடைய அருளை தருவாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
{{comments.comment}}