சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள டி. குகேஷை Our Own Telugu Boy என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் அவரது இந்த பேச்சை கடுமையாக விமர்சித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பிறந்தவர் டி. குகேஷ். தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழனாக, தமிழ் உணர்வோடு, தமிழ்நாட்டவராக இருப்பவர் குகேஷ். செஸ் உலகில் தனக்கென தனி பாதையை வகுத்து இன்று புகழின் உச்சியைத் தொட்டுள்ளார். தமிழ்நாடு அரசு குகேஷுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து அவரது சாதனை பயணம் எந்த வகையிலும் தடைபடாமல் தொடர்ந்து உதவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இதையெல்லாம் மறந்து விட்டு, குகேஷுக்கு ஒரு உதவி கூட செய்யாமல் இருந்து விட்டு, தற்போது அவர் புகழ் உச்சியை அடைந்துள்ள நிலைியல் அவரை தெலுங்குப் பையன் என்று உரிமை கொண்டாடி ஒரு டிவீட் போட்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவரது இந்த பேச்சை பிரிவினைவாத, சுயநலப் பேச்சு என்று பலரும் கண்டித்து வருகின்றனர்.
டிங் லீரனை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் டி. குகேஷ். விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு மிகவும் இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் குகேஷ் ஆவார். இதன் மூலம் செஸ் உலகில் புதிய வரலாறும் படைத்துள்ளார்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவரை இந்தியராகத்தான் பலரும் பார்த்துப் பாராட்டி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், விளையாட்டு உலகைச் சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நமது தெலுங்குப் பையன், இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சிங்கப்பூரில் புதிய வரலாறு படைத்துள்ளார் குகேஷ். ஒட்டுமொத்த நாடும் இந்த அபார சாதனையைக் கொண்டாடி வருகிறது. அவர் மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
சந்திரபாபு நாயுடுவின் இந்த வாழ்த்துச் செய்திக்கு பாராட்டுக்களை விட கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும்தான் அதிக அளவில் குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் யாரும் நாயுடுவின் இந்த கருத்துக்கு இதுவரை பதில் தரவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 தேர்தலுக்கு.. தவெக கேட்கப் போகும் சின்னம் என்னாவா இருக்கும்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
Roston Chase.. வெஸ்ட் இண்டீஸ் Test அணிக்கு புதிய கேப்டன்.. 2 வருட கேப்புக்குப் பிறகு விளையாடுகிறார்!
ஆபரேஷன் சிந்தூர் அதிரடி எதிரொலி.. பாதுகாப்புத்துறை பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு
ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும்: அரசுத் தேர்வுகள் இயக்கம்
இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Maman movie: ஏண்டா தம்பிகளா, மண் சோறு சாப்பிட்டா எப்படிடா படம் ஓடும்.. நடிகர் சூரி ஆதங்கம்!
நிதி ஆயோக் கூட்டம்: மே 24 முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்!
ஆடு மாடுகளோடு நிம்மதியாக விவசாயம் பார்க்கிறேன்.. இப்படியே இருக்கப் போறேன்.. அண்ணாமலை
தமிழகத்தில்.. பள்ளிகள் திறப்பு எப்போது..? தேதி அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
{{comments.comment}}