Our Own Telugu Boy.. டி. குகேஷை உரிமை கொண்டாடிய சந்திரபாபு நாயுடு.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

Dec 13, 2024,01:34 PM IST

சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள டி. குகேஷை Our Own Telugu Boy என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச்  சேர்ந்த பலரும் அவரது இந்த  பேச்சை கடுமையாக விமர்சித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


தமிழ்நாட்டில் பிறந்தவர் டி. குகேஷ். தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழனாக, தமிழ் உணர்வோடு, தமிழ்நாட்டவராக இருப்பவர் குகேஷ். செஸ் உலகில் தனக்கென தனி பாதையை வகுத்து இன்று புகழின் உச்சியைத் தொட்டுள்ளார். தமிழ்நாடு அரசு குகேஷுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து அவரது சாதனை பயணம் எந்த வகையிலும் தடைபடாமல் தொடர்ந்து உதவி வருகிறது.




இந்த நிலையில் தற்போது இதையெல்லாம் மறந்து விட்டு, குகேஷுக்கு ஒரு உதவி கூட செய்யாமல் இருந்து விட்டு, தற்போது அவர் புகழ் உச்சியை அடைந்துள்ள நிலைியல் அவரை தெலுங்குப் பையன் என்று உரிமை கொண்டாடி ஒரு டிவீட் போட்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவரது இந்த பேச்சை பிரிவினைவாத, சுயநலப் பேச்சு என்று பலரும் கண்டித்து வருகின்றனர்.


டிங் லீரனை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் டி. குகேஷ். விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு மிகவும் இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் குகேஷ் ஆவார். இதன் மூலம் செஸ் உலகில் புதிய வரலாறும் படைத்துள்ளார்.


அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவரை இந்தியராகத்தான் பலரும் பார்த்துப் பாராட்டி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், விளையாட்டு உலகைச் சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.


அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நமது தெலுங்குப் பையன், இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்.  18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சிங்கப்பூரில் புதிய வரலாறு படைத்துள்ளார் குகேஷ். ஒட்டுமொத்த நாடும் இந்த அபார சாதனையைக் கொண்டாடி வருகிறது. அவர் மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.


சந்திரபாபு நாயுடுவின் இந்த வாழ்த்துச் செய்திக்கு பாராட்டுக்களை விட கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும்தான் அதிக அளவில் குவிந்து வருகின்றன.


தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் யாரும் நாயுடுவின் இந்த கருத்துக்கு இதுவரை பதில் தரவில்லை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்