சண்டை போடலை.. கோபப்படலை.. ச்சும்மாவே நின்னு.. ரூ. 1.25 கோடியைத் தட்டிச் சென்ற சேவல்.. கெத்துணே நீ!

Jan 16, 2025,03:10 PM IST

கோதாவரி (ஆந்திரப் பிரதேசம்): மகர சங்கராந்தி பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற சேவல் சண்டையில், களத்தில் சண்டையிடாமல் வேடிக்கை பார்த்த, சேவல் 1.25 கோடி பரிசு தொகையை அள்ளி சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, ஆந்திராவின் பாரம்பரியமான சேவல் சண்டை ஒவ்வொரு வருடமும் நடத்துவது வழக்கம். ஆனால் சேவல் சண்டை சூதாட்டமாக கருதப்படுவதால் இதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் கிராமப்புறங்களில் சேவல் சண்டை தற்போது வரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திரா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சேவல் சண்டை நடைபெற்று வந்தது. 




இதனை காண பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆர்வத்துடன் குவிந்தனர். சேவல் சண்டை நடத்தப்பட்டு இதுவரை 2000 கோடி வரை ரூபாய் சூதாட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த சேவல் சண்டையில் வினோதமான நிகழ்வு நடந்தேறியது.


அங்கு ஐந்து சேவல்கள் ஒரே வளையத்திற்குள் சண்டை போட களம் இறக்கினர். இதில் நான்கு சேவல்கள்  ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டு ஆக்ரோஷமாக சண்டை போட்டன. அதாவது தாங்கள் வந்த வேலையை அவை சரியாக பார்த்தன. ஒரு கட்டத்தில் நான்கு சேவல்களும் தோல்வியை தழுவி அடுத்தடுத்து வெளியேறின. ஆனால் சண்டை போட்ட நான்கு சேவலுடன் ஒரு சேவல் மட்டும் சண்டை போடாமல் கடைசிவரை நின்று வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தது. அது எந்த சேவலுடனும் சண்டை போடவில்லை. கோபம் காட்டவில்லை, கொஞ்சம் கூட டென்ஷனே ஆகவில்லை.


மற்ற சேவல்கள் மயக்கம் அடைந்ததால் சும்மா நின்னு, வேடிக்கை பார்த்த சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளருக்கு ரூபாய் 1.25 கோடி பரிசாக அளிக்கப்பட்டது. இச்சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டை போடலை, ரத்தம் சிந்தலை, அடிபட்டு காயமாகலை.. கொஞ்சம் வியர்வையே சிந்தாமல் ஜம்முன்னு  நின்னு தனது உரிமையாளரை கோடீஸ்வரானாக்கி விட்டது இந்த பலே சேவல்!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

news

கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்த தவறான மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்டது மெட்டா!

news

திமுக அரசு தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல: டாக்டர் அன்புமணி

news

நீலகிரி, கோவைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில்.. பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

news

புதியதோர் உலகம் செய்வோம்! (கவிதை)

news

திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

news

Coffee with love.. இந்தோனேசியாவின் காபி காமு.. இதைப் பார்த்து நாம நிறைய கத்துக்கணும்!

news

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி தயார்..! நாளை மறுநாள் விஜய் அறிமுகம் செய்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்