மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

Sep 19, 2024,04:52 PM IST

அமராவதி: ஆந்திராவில், மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் மாதத்தின் முதல் தேதியிலிருந்து, புதிய மதுபான கொள்கை அமலுக்கு வருகிறது. அதன்படி எந்த பிராண்டின் மதுவையும் ரூ.99க்கு (180மிலி) வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் மது கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.


மதுவுக்கு எதிரான மகாத்மா காந்தியின் பிறந்த மாதத்தில் இந்த மது பான விலை மாற்றத்தை மாநில அரசு அமல்படுத்துவது சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை மதுபானக் கொள்கை என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டுள்ளது. குஜராத், பீகார் மாநிலங்களில் மதுபானங்களுக்கு  அனுமதி இல்லை. தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகளுடன் மது விற்கப்பட்டு வருகிறது. கோவா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பெரிய அளவில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இருப்பதில்லை. 



இத்தகைய நிலையில், ஆந்திராவில் புதிய மதுபான கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த புதிய மதுபான கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தரம், அளவு மற்றும் சரியான விலையை உறுதி செய்வதே இந்த மதுபான கொள்கையின் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் கே.பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதிய கொள்கையில் லாட்டரி முறையில் மதுபானக் கடைகளுக்கான உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்காக விண்ணப்பக் கட்டணமாக ரூ.2 லட்சம் வசூலிக்கப்படும். உரிமம் ஒதுக்கப்பட்ட பிறகு எல்லா இடங்களிலும் காலை 10 மணி  முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். உரிமக் கட்டணம் என்பது ஏரியாவை பொறுத்து மாறுபடும். ரூ.50 லட்சம் முதல் ரூ.85 லட்சம் வரை நான்கு அடுக்குகளில் உரிமை கட்டணம் இருக்கும். கடை உரிமையாளர்கள் தங்கள் விற்பனையில் 20 சதவீதம் லாபத்தைப் பெறுவார்கள். இதில் குறைந்தபட்சம் 10 சதவீதம் இடங்களில் கள் விற்பனையும் அனுமதிக்கப்படும். 

தனியாக பிரீமியம் கடைகளுக்கு பெர்மிட் வழங்கப்படும். 12 பிரீமியம் கடைகளுக்கு 5 ஆண்டுகள் உரிமம் வழங்கப்படும். இந்த பிரீமியம் கடைகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 15 லட்சமாகவும் உரிமக் கட்டணம் ரூ.1 கோடியாக இருக்கும். அதே நேரம் திருப்பதியில் பிரீமியம் கடைகள் அனுமதிக்கப்படாது. முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு மதுபானக் கொள்கையைத் தவறாகக் கையாண்டது. இதனால் மாநில  அரசுக்கு மிகப் பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தரமற்ற மதுவை வழங்கியதால், உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை எல்லாம் சரி செய்யும் விதமாக இப்போது புதிய மதுபான கொள்கையைக் கொண்டு வந்துள்ளோம் "என்றார்.

இந்த புதிய மதுபானக்கொள்கையின் மூலம் ஆந்திர அரசுக்கு ஆண்டுக்கு 2000 கோடி வருவாய்  கிடைக்கும் என கூறப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்