டெல்லி: ஆம் ஆத்மி கட்சியோட கேரக்டர் போய் விட்டது. மது ஊழல், பணம் என்று அதற்கு அடிமையாகி தனது நல்ல பெயரை இழந்து விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். அதனால்தான் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
அன்னா ஹசாரேவை மக்கள் மறந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த நாட்டையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு டெல்லியில் அவரது தலைமையில் நடந்த ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை மக்கள் மறந்திருக்க முடியாது. அப்போது அவருடன் இணைந்து செயல்பட்டவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஆனால் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்து பிரதமராக நரேந்திர மோடி வந்ததும், அன்னா ஹசாரே ஆஃப் ஆகி விட்டார். அதன் பிறகு அவர் எந்தப் போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை. அதேசமயம், கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். டெல்லி, பஞ்சாபில் அவரது கட்சி ஆட்சியமைத்தது. இதில் இப்போது டெல்லியை ஆம் ஆத்மி கட்சி இழக்கிறது.
இந்த நிலையில் கெஜ்ரிவால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு குறித்து ஹசாரே கருத்து தெரிவித்துள்ளா். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் நீண்ட காலமாகவே சொல்லி வருகிறேன். தேர்தலில் போட்டியிடும்போது, வேட்பாளர்களுக்கு ஒரு நல்ல நடத்தை இருக்க வேண்டும். நல்ல கொள்கை இருகக் வேண்டும். நல்ல பெயர் இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால் மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆத் ஆத்மியிடம் இவை எதுவுமே இல்லை.
மது ஊழலிலும், ஊழலிலும் அவர்கள் மூழ்கிப் போய் விட்டார்கள். கெஜ்ரிவாலின் நற் பெயர் போய் விட்டது. அரசியலில் ஒருவர் மீது புகார் வருவது இயல்புதான். ஆனால் அதிலிருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும். தங்களது தரப்பை நியாயப்படுத்த வேண்டும். தாங்கள் சுத்தமானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். உண்மையே எப்போதும் வெல்லும்.
ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டபோது அதில் சேரக் கூடாது என்ற முடிவை எடுத்தேன். இப்போது வரை அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் ஹசாரே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}